திங்கள், 30 நவம்பர், 2009

திருமாவுண்ணி - கண்ணகி

சங்க இலக்கியத்தில் திருமாவுண்ணி என்னும் பத்தினிப் பெண் கூறப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறப்படுகிறாள். இருவருமே கணவனை இழந்தவர்கள். ஒரு முலையை இழந்தவர்கள். இதன் காரணமாக இருவரும் ஒருவரே என்று சொல்லப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இருவரும் வேறானவர்கள். இதற்கான காரணத்தை மயிலைசீனி.வேங்கடசாமி நன்கு ஆராய்ந்து விளக்கிக் கூறுகிறார்.
இருவரும் ஒருவரே என்பதற்கான காரணங்கள்:


1 இருவருமே கணவனை இழந்தவர்கள்
2 இருவருமே ஒரு முலையை இழந்தவர்கள்
3 வேங்கை மர நிழலில் அமர்ந்து இருந்தவர்கள்


இருவரும் வேறானவர்கள் என்பதற்கான காரணங்கள்: தினைப்புனம் காவல் காக்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.


திருமாவுண்ணி:

இவள் வேங்கை மர நிழலில் உயிர் விடவில்லை.

இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்பட்டிருந்தது.
இவள் தன் கொங்கையை அறுத்தது வேங்கை மரத்துக்கு அருகில்.


கண்ணகி:

இவள் வழிநடைப் பயணக் களைப்பு நீங்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.

இவள் வேங்கை மரத்து நிழலில் உயிர் விட்டாள்.


இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்படவில்லை.
இவள் கொங்கை அறுத்து வீசியது மதுரை மாநகரத்தில்.

எனவே திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறானவர்கள்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் - இவர் சங்கப் புலவர். நற்றிணையில் 382 ஆம் செய்யுள் இவர் பாடியது. நிகண்டு நூல் ஒன்றை எழுதியமையால் நிகண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (கைத்தடியாக) கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

இதனை மயிலை சீனி. வேங்கடசாமி பின்வருமாறு மறுத்துரைக்கிறார்:

நிகண்டு நூல் செய்தமையால் நிகண்டனார் என்று பெயர் பெற்றிருக்க மாட்டார். மாறாக நிகண்டாசிரியர் என்றே அழைக்கப் பெற்றிருப்பார். நிகண்டன் என்றால் சமண சமயத்தார் என்று பொருள். எனவே இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். எனவே இவர் நிகண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

மான் கொம்பை கைக்கோலாகக் கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்பதும் சரியானது இல்லை. சமதண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். அதுபோல கலைக்கோட்டுத்தண்டம் என்பதும் ஓர் ஊரின் பெயராக இருக்கலாம். அவ்வூரைச் சேர்ந்தவரான இப்புலவர் அவ் ஊரின் பெயரால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, சமண சமயத்தைச் சேர்ந்த நிகண்ட வாதியான இவர் நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கபட்டார் என்பது மயிலாரின் ஆய்வு முடிபு ஆகும்.

வியாழன், 26 நவம்பர், 2009


காக்க... காக்க... சுற்றுச் சூழல் காக்க


உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின் விளைவாக எழுந்தது இக்கட்டுரை ஆகும். இக்கட்டுரையைப் படிப்பவர்களில் எவரேனும் ஒருவருக்கேனும் சுற்றுச் சூழல் பற்றிய தாக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டாலும் கூட நான் பெரிதும் மகிழ்வேன்.


உயிரனங்களின் சூழலுக்கேற்ற செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளைச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று கூறலாம். சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும்.
மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.


எனவே, சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை. அதாவது நம்மைச் சுற்றி உள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு இன்று சமூகத்தில் பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது. இதைத்தான் சுற்றுச்சூழல் காப்பு அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றெல்லாம் கூறுகின்றோம்.
சூழலியல் அறிஞர்கள் சுற்றுப்புறச் சூழலைச் சமூகவியல் நோக்கில் சூழலியல், மானிடவியல் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் என்று பகுத்துக் காட்டுகின்றனர். இம்மூன்றும் சமூக உருவாக்கத்தை, வாழ்க்கை முறைகளை மையமாகக் கொண்ட நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும்.


சமூகவியல் நோக்கில் சூழலியல் ஒவ்வொரு சமூகத்திலும் சாதி, சமயம், கல்வி, தொழில் போன்ற நிறுவனங்கள் உண்டு. இந்தச் சமூக நிறுவனங்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று இணக்கமான உறவைப் பெற வேண்டுமெனில், அவை இயற்கையுடன் இணக்கமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். சமூக ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சுற்றுப்புறச் சூழலாக மாறியது என்று சமூகவியலார் விளக்குவர்.


மானுடவியல் நோக்கில் சூழலியல் மானுடச் சமூகத்திற்கும், அவர்களின் சுற்றுப்புறச் சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராய்ந்து விளக்குவது மானுடச் சுற்றுப்புறச் சூழலியல் எனப்படும்.


பண்பாட்டுச் சூழலியல் ஒரு குறிப்பிட்ட சூழலில், சில குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறுகளைத் தழுவிக் கொள்ளுதல் அல்லது அச்சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியல் முறைகளைப் பொருத்தமுற மாற்றியமைத்துக் கொள்ளுதலை விளக்குவது பண்பாட்டுச் சூழலியல் என்று அழைக்கப்படுகிறது.


சூழலியல் அறிஞர்கள் பல கோணங்களில் சூழ்நிலைக் காரணிகளை அணுகுவதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒல்லும் வகையெல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை நாம் பெற முயல வேண்டும் - சூழலியல் பற்றிய அறிவைப் பொதுமக்களுக்கு அறிஞர்களும் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாமர மக்களுக்கும்கூட சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்படும்.


மனிதன் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றான். இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவனால் வாழவே முடியாது. சங்க காலத்திலும் சரி - இன்றும் சரி மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தியே வாழ்ந்து வந்தனர; வாழ்ந்து வருகின்றனர்.
சங்க கால மக்கள் இயற்கை வளங்களை, ஆற்றல்களை அழிக்கவேயில்லை என்று கூற முடியாது. ஓரளவு அழித்தார்கள். ஆனால் அழித்த ஆற்றலைப் புதுப்பித்தலையும் செய்து கொண்டு இருந்தனர். இன்று ஆற்றலைப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy Resources) என்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் (Non Renewable Energy Resources) என்றும் பிரிக்கின்றனர். சங்க கால மக்கள் புதுப்பிக்க கூடிய ஆற்றலையே அதிகம் பயன்படுத்தினர். மரங்களை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்ட மக்கள் வெட்டிய மரங்களையும் வளர்க்கத் தவறவில்லை. வீட்டைச் சுற்றி நொச்சி மரம் வளர்த்தனர் சங்க மக்கள். ஏதோ ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று எண்ணாமல் மருத்துவப் பண்புகள் நிறைந்த, இதயத்திற்கும், சுவாச உறுப்புகளுக்கும் நலம் தரக் கூடிய தாவரங்களை வளர்த்தனர்.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்களைக் காட்டிலும் இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்களுக்கு மிகுந்த சுற்றுச் சூழல் அறிவு இருக்கும் என்று கூறலாம். ஆனால், சங்க கால மக்கள் சுற்றுச் சூழலிடத்துக் கொண்டிருந்த பய பக்தி இன்றைய மக்களிடம் இல்லை என்றே கூற வேண்டும்.


ஏனெனில், இன்றைய மக்கள் வீடுகள் கட்டுவதற்குக் காடுகளையும், விளை நிலங்களையும், ஏரிகளையும் அழிக்கின்றனர். அவற்றில் வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். அதனால் விளைகின்ற சுற்றுச் சூழல் கேடுகள் சொல்லி மாளாது.
சமீபத்தில் செய்தித் தாள்களில் வந்திருந்த செய்திகளை அனைவரும் கண்டிருப்பீர்கள். அரசு அலுவலராக இருந்த சிலர் புறம்போக்கு நிலங்களையும் ஏரி, குளங்களையும் பட்டா போட்டு விற்று விட்டனர். இது போன்று தெரிந்தே செய்கின்ற சுற்றுச் சூழல் கேடுகள் இன்று ஏராளம் ... ஏராளம்.


உங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறதா? புறம்போக்கு நிலங்களையும், ஏரி குளங்களையும் பட்டா போட்டது எப்படி சுற்றுச் சூழல் கேடாகும் என்று. சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகரமே மிதந்ததே! இதற்கு என்ன காரணம்?


மழைநீர் செல்லக் கூடிய வடிகால் வசதிகளை அரசு செய்து கொடுத்திருந்தும் அவற்றைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமையே ஆகும்.


மழைநீர் சென்று அடையக் கூடிய ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளை அடைத்து கடைகள், வீடுகள் கட்டிக் கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளில் வீணான திடப் பொருள்களைப் போட்டமையால் நீரோட்டம் தடைப்பட்டது - இவை போன்ற பலவித காரணங்களால் தான் சென்னை நகரம் மிதக்கக் காரணமாயிற்று.


நான் ஏன் இதை எடுத்துக்காட்டினேன் என்றால் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு என்பது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று. இதன் விளைவாக சென்னை நகரம் மிதந்ததும் நாம் கண் கூடாகக் கண்ட ஒன்று. இதுபோல் இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.


எனவே, சுற்றுச் சூழலைச் சரிவரப் பாதுகாக்கவில்லை என்றால் மனித சமுதாயமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் நிலை மட்டுமின்றி மனித சமுதாயமே அழிந்து போகின்ற அபாயம்கூட ஏற்படும். தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.


வேலியில ஓடுற ஓணாண
மேல தூக்கிப் போட்டுக்கிட்டு
குத்துதே குடையுதே


என்பது அப்பழமொழி.


சுற்றுச் சூழல் கவனம் நம் அனைவருக்கும் உடனடியாக ஏற்பட வேண்டும். இல்லை என்றால் மேற்சுட்டிய பழமொழி உண்மையாகி விடும்.

புதன், 25 நவம்பர், 2009

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் :

திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒன்றா?

கண்ணகி மதுரையை எரித்தாளா ?

காவிரியா? காவேரியா?

கோழி பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா?

இவை தொடர்பாக விரைவில் எழுதுவேன்.

திங்கள், 23 நவம்பர், 2009

இணையமும் இனிய தமிழும்


இனிய தமிழ் ஆர்வலர்களே

வணக்கம். எங்கள் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இணையமும் இனிய தமிழும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தமிழ் தகவல்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. நூலின் விவரம் வருமாறு:

இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணைய தளங்கள்
வேலை வாய்ப்பு இணைய தளங்கள்

ஆகிய தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.

விலை; ரூபாய் 60

வெளியீடு: இசைப் பதிப்பகம்
சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை,
கும்பகோணம் - 612 001, தமிழ்நாடு.

ISBN: 978-81-908398-0-8௦

பக்கங்கள்: 128
ஆண்டு: சூன் 2009

வியாழன், 12 நவம்பர், 2009

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இணையமும் இனிய தமிழும் என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். இணையம் பற்றி அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இணையத்தில் தமிழ் அத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

கிடைக்கும் இடம்: ௨௪ இசை இல்லம், சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம்612001. தமிழ்நாடு .

வியாழன், 23 ஏப்ரல், 2009

î뢬ê ñ£õì¢ìî¢ î¤¼ð¢¹èö¢î¢ îôé¢è÷¢

 

ºù¢Â¬ó

 Þù¢¬øò î뢬ê ñ£õì¢ìñ¢ 3396 ê.è¤.ñ¦. ðóð¢¢ð÷¾ñ¢ 22,16,138 ñè¢è÷¢ ªî£¬è»ñ¢ ªè£í¢´ õ¤÷颰è¤ø¶. Þî¢î뢬ê ñ£õì¢ìî¢î¤ô¤¼ï¢¶ Þù¢¬øò ï£èð¢¢ð좮ùñ¢ ñø¢Áñ¢ õ£Ïó¢ ñ£õì¢ìé¢è÷¢ ð¤ó¤ï¢¶ «ð£ò¢õ¤ì¢ìù. Þ袠 è좴¬óò¤ù¢èí¢ Þõ¢õ¤óí¢´ ñ£õì¢ìé¢è¬÷»ñ¢ à÷¢÷ìè¢è¤ò å¼é¢è¤¬íï¢î î뢬ê ñ£õì¢ìð¢ ð°î¤ò¤ô¢ Þìñ¢ ªðø¢Á÷¢÷ ð¢¹èö¢î¢ îôé¢è÷¢ ðø¢ø¤ õ¤÷è¢èð¢¢ð´è¤ù¢øù.

î뢬êò¤ù¢ ê¤øð¢¹è¢è÷¢

 î뢬ê ñ£õì¢ìñ¢ ð¤ø¢è£ô «ê£ö𢠫ðóóê¤ù¢  ê£ñ¢ó£ü¢òñ£è ê¤øð¢¹ø¢Áî¢ î¤èö¢ï¢î¶. Þ¶ è£õ¤ó¤ò£ô¢ õ÷ñ¢ ªè£ö¤è¢°ñ¢ «õ÷£í¢ ªî£ö¤ô¢ ê¤ø õ¤÷颰ñ¢ ñ£õì¢ìñ£°ñ¢.  Þñ¢ñ£õì¢ìñ¢ îñ¤ö¢ï£ì¢®ù¢ ªïø¢è÷ë¢ê¤òñ¢ âù¢Á ê¤øð¢ð¤è¢èð¢¢ð´è¤ø¶. àôèð¢¹èö¢ ªðø¢ø îë¢¬ê ªðó¤ò «è£õ¤ô¢, êó²õî¤ ñè£ô¢ Ëôèñ¢, îñ¤ö¢ð¢ ¢ðô¢è¬ôè¢èöèñ¢ Ýè¤ò¬õ Þ颰 à÷¢÷ù. îë¢ê£×ó¢ æõ¤òé¢èÀñ¢ è¬ôî¢î좴èÀñ¢ Üö° õ£ò¢ï¢îù.

 Ü¼íè¤ó¤ï£î¼ñ¢ ð¢¹è¿ñ¢

 Ü¼íè¤ó¤ï£îó¢ 15Ýñ¢ Ëø¢ø£í¢®ô¢ õ£ö¢ï¢îõó¢. Þõó¢ õí¢í£ñ¬ô ñ£õì¢ìî¢î¤ô¢ ð¤øï¢îõó¢. îñ¤ö¢, õìªñ£ö¤ Ýè¤ò Þ¼ ªñ£ö¤è÷¤½ñ¢ ¹ô¬ñî¢ î¤øñ¢ ï¤óñ¢ð𢠪ðø¢øõó¢. «îõ£ó Íó¢î¢î¤è÷¢  ê¤õî¢îôé¢è÷¢ «î£Áñ¢ ªêù¢Á ¬êõ ªïø¤¬òð¢ ðóð¢ð¤ò¶ «ð£ô Þõ¼ñ¢ º¼èù¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ îôé¢è÷¢ «î£Áñ¢ ªêù¢Á  º¼èù¢ ¹èö¢ð£® ñè¢è¬÷ð¢ ðóõê𢢠ð´î¢î¤òõó¢.

 

 Þõó¢ ð£®ò ð¢¹èö¤ô¢ 1307 Þ¬êð¢¢ð£ìô¢è÷¢ à÷¢÷ù. Þõø¢Á÷¢ 1088 êï¢î «õÁð£´è÷¢ à÷¢÷ù. Þõ¬óð¢«ð£ô Ýò¤óè¢èíè¢è£ù êï¢î «õÁð£´è÷¤«ô ð£ìô¢ ¹¬ùï¢îõó¢è÷¢ âõ¼ñ¢ Þôó¢. ð¢¹èö¤ô¢ à÷¢÷ Þ¬êî¢î£÷é¢è÷¢, Þ¬êËô¢è÷¢ âõø¢ø¤½ñ¢ Þìñ¢ ªðø£î¬õ Ý°ñ¢. (è£í¢è; õ¤è¢è¤ð¢ð¦®ò£)

 î뢬ê ñ£õì¢ìî¢ î¤¼ð¢¹èö¢î¢ îôé¢è÷¢

 Ü¼íè¤ó¤ï£îó¢ â¿î¤ò ð¢¹èö¤ô¢ å¼é¢è¤¬íï¢î î뢬ê ñ£õì¢ìî¢î¤ô¢ à÷¢÷ 44 î¢îôé¢è÷¢ ðø¢ø¤ 101 ð£ìô¢è÷¤ô¢ °ø¤ð¢ð¤ì¢´÷¢÷£ó¢. Üî¢îôé¢è÷¢, Üî¢îôé¢èÀ袰ó¤ò ð£ìô¢è÷¢ (ܬìð¢¹è¢ °ø¤è¢°÷¢ à÷¢÷¬õ) ð¤ù¢õ¼ñ£Á;

 

õ£Ïó¢(7), õ¤¬ìñ¼Éó¢(4), õ£´¶¬ó(1), è¢èì×ó¢(2), âí¢èí¢(1), â좮袰®(1), ¬õò£Á(1), °ìõ£ò¤ô¢(2), °ñ¢ð«è£íñ¢(7), ê¤è¢èô¢(2), ꢪêé¢è£ì¢ì颰®(1), îë¢ê£×ó¢(3), î¤ó¤¹õùñ¢(1), èꢲóñ¢(1), ðï¢î¬íïô¢Öó¢(7), ð¢¢ðó£ò¢î¢¶¬ø(1), ð¬öò£¬ø(1), ð¢¢ðùï¢î£÷¢(1), ñ¼î¢¶õ袰®(1), ñò¤ô£´¶¬ó(1), õô뢲ö¤,(1), ¬õî¢î¦²õóù¢«è£õ¤ô¢(6).

ê¦ó¢è£ö¤(14), õ¤¬ìè¢èö¤(8), î£ù¢«î£ù¢ø¤ âù¢Âñ¢ Ýè¢Ãó¢(1), èï¢îù¢°®(1), î¤ô¬îð¢ðî¤ âù¢Âñ¢ «è£ò¤ô¢ð(3), õ£ë¢ê¤òñ¢(1), õ¤ø¢°®(1), õ¤üò¹óñ¢(1), ï£èð¢¢ð좮ùñ¢(3), õô¤õôñ¢(1), ¼î¢î¤ âù¢Âñ¢ °î¢î£ôñ¢(1), õ¦ö¤ñ¤ö¬ô(1), ªè£ì¢¬ìÎó¢(1), ê¤õ¹óñ¢(1), è²õóñ¢(1), Ãï¢îÖó¢(1),

  î¤¼ê¢êî¢î¤ºî¢îñ¢(1), ð¢¢ð¬öò£¬ø(1), ê¢êè¢è¤óð¢¢ð÷¢÷¤(1), 袰óé¢è£´¶¬ø(3), ð¢Ì¼î¢î¤(1),ªïò¢î¢î£ùñ¢(1),  Þî¢îôé¢èÀ÷¢ °ø¤ð¢ð¤ìî¢îè¢è¬õ ðø¢ø¤ò ð¢¹èö¢ê¢ ªêò¢î¤è¬÷î¢ ªî£ìó¢ï¢¶ «ï£è¢°«õ£ñ¢.

 î¤¼õ£Ïó¢;

 ð²õ¤ù¢ èù¢Á袰 ï¦î¤ õöé¢è¤ò ñÂï¦î¤ «ê£öù¤ù¢ ÝÀ¬èò¤ô¢ Þ¼ï¢î «ê£ö ïèóñ¢ õ£Ïó¢ Ý°ñ¢. Þ¶ ï£èð¢¢ð좮ù袰 «ñø¢«è 13 ¬ñô¢ ªî£¬ôõ¤ô¢ à÷¢÷¶. Þî¢îôî¢î¤ô¢ ð¤øï¢îõó¢ ܬùõ¼ñ¢ ºè¢î¤ ܬìõó¢ âù¢ø ïñ¢ð¤è¢¬è àí¢´. Þ颰÷¢÷ î¤ò£«è²õóó¢ «è£ò¤ô¢ 20 «õô¤ ï¤ôð¢¢ðó𢹠à¬ìò¶.

      Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ «õô¤¬ù𢠹èö¢ï¢¶ ð£´è¤ø£ó¢ ܼíè¤ò£ó¢. Þõó¶ ð£ìô¢è÷¤ô¢ º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ «õô¤¬ù𢠹èö¢ï¢¶ ð£´îô¢ âù¢   ðóõô£èè¢ è£íð¢¢ð´è¤ø¶.

 Ãê¢êñ¤ô¢ô£ñ½ñ¢, àôèî¢î£ó¢ ðö¤î¢¶ð¢ «ðê£ õí¢íºñ¢, âù¢ à÷¢÷ñ¢ «è£íô¢ õö¤ò¤ô¢ ªêô¢ô£ õí¢íºñ¢ ï£ù¢ àù¢ «õô¤¬ù𢠹èö¢ï¢¶ ð£ì «õí¢´ñ¢ âù¢Á ܼíè¤óò£ó¢ èê¤ï¢¶¼èð¢ ð£´è¤ø£ó¢.

 

Þõ¢×ó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ Þ¬øõ¬ù, «õî袰 «ñø¢ðì¢ìõù¢ âù¢Áñ¢, «îõó¢èÀè¢°î¢ î¬ôõù¢ âù¢Áñ¢, èìð¢¢ð ñ£¬ô¬ò Üí¤ï¢îõù¢ âù¢Áñ¢, ñ£¬ù åî¢î õ÷¢÷¤¬òê¢ êï¢î¤î¢îõù¢ âù¢Áñ, Åó¬ùî¢ «î®ê¢ ªêù¢øõù¢ âù¢Áñ¢, î¦ð¢ªð£ø¤ò£ò¢î «î£ù¢ø¤òõù¢ âù¢Áñ¢ Þõó¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.

 âù¢ î£ò¢è¢° ï£ù¢ ð¬èõù¢ Ý«ùù¢. âù¢ àøõ¤ùó¢è÷¢ âù¢¬ùî¢ Éø¢Áè¤ø£ó¢è÷¢. Þ÷ õ£¬ìè¢ è£ø¢Áñ¢Ãì ÜÁè¢è¤ù¢ø õ£÷¢ «ð£ô âù¢ «ñô¢ ð좴 ªï¼ð¢¹ð¢ «ð£ô¢ ²´è¤ø¶. Þî¢î° Þö¤ï¤¬ôò¤ô¢ õ£¿ñ¢ ï£ù¢ ßò£î£¬ó𢠹èö¢ï¢¶ 𣮻ñ¢ ß«ìø£ñô¢ îõ¤è¢°ñ¢ ê¤ôó¢ «ð£ô âù¢ õ£ö¢¾ñ¢ îõ¤î¢¶è¢ ªèì£ñô¢ âù¢¬ùè¢ è£î¢î¼÷¢õ£ò£è âù¢Á ñùº¼°è¤ø£ó¢ ܼíè¤ó¤ò£ó¢.

 

õ£Ïó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù - ð£«ô£, «î«ù£, ªõô¢ôè¢è좮«ò£, «îõó¢è÷¢ è¬ìî´î¢î Üñ¤ö¢î«ñ£, ñù¢ñî«ù£, Åó¤ò«ù£, ºî¢«î£ âù¢ªøô¢ô£ñ¢ ñ¤è õ¤ò «ð£ø¢Áñ¢ ܼíè¤ó¤ò£ó¢ õ£Ïó¤ù¢ ªð¼ë¢ªêô¢õñ£è º¼è𢠪ð¼ñ£ù¢ î¤èö¢õî£è¾ñ¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢. 

õ¤¬ìñ¼Éó¢;

 °ñ¢ð«è£íî¢î¤ø¢° õìè¤öè¢è¤ô¢ åù¢ð¶ è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ õ¤¬ìñ¼Éó¢ à÷¢÷¶. è£õ¤ó¤è¢ è¬óò¤ô¢ à÷¢÷ - è£ê¤è¢° Þ¬íò£è ñî¤è¢èð¢¢ð´è¤ù¢ø ÝÁ ê¤õî¢îôé¢èÀ÷¢ Þ¶¾ñ¢ åù¢Á.  Þõ¢×ó¤ô¢ à÷¢÷ ñè£ô¤é¢è ²õ£ñ¤è÷¢ «è£ò¤ô¢ 1200 Ýí¢´è÷¢ ðö¬ñ õ£ò¢ï¢î¶ Ý°ñ¢.

 

Þõ¢×ó¤ù¢èí¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¤ìñ¢ ñè¢è÷¢ Þö¤°íî¢îó¢è÷£è Þ¼ð¢¢ð¬î âô¢ô£ñ¢ â´î¢¶è¢Ãø¤ Üîù¤ù¢Áñ¢ Üõó¢è¬÷ õ¤ôè¢è¤ð¢ ªð¼ñ£ù¤ù¢ õ®è¬÷ ܬìò Üõó¢èÀ袰 ܼ÷¢ ªêò¢ò «õí¢´ñ¢ âù¢Á º¬øò¤´è¤ø£ó¢.

ñù¤îó¢è÷£èð¢ ð¤øï¢îõó¢è÷¢ ªðí¢í¤ù¢ð ï£ì¢ìñ¢ ªè£í¢ìõó¢è÷¢; õ¦´ñ¢ õ£ê½ñ¢ ñ£ìºñ¢ Ãìºñ¢ è좮 õ£ö¢õô ñ¤°ï¢î Ýó¢õñ¢ è£ì¢´ðõó¢è÷¢; îù袰÷¢ Þ¬íò𢠪ðø¢ø ˬôê¢ ªê½î¢¶õ¬î ñ좴«ñ èì¬ñò£èè¢ ªè£í¢ì áê¤ «ð£ô îñ¢¬ñê¢ ê£ó¢ï¢îõó¢èÀ袰ñ좴«ñ «õí¢´õù ªêò¢¶ õ£ö¢ï¢¶ õ¼ñ¢ Þòô¢¹¬ìòõó¢è÷¢ Þõó¢è÷¢.

 

Þô¢¬ô âù¢Á õ Þóï¢îõó¢èÀ袰 å¼ ê¤ø¤¶ñ¢ ßò£ñô¢ Üõó¢è¬÷ Üé¢«è ªêô¢; Þé¢«è ªêô¢ âù¢Á ܬôè¢èö¤î¢¶ Þù¢ðñ¢ è£í¢«ð£ó¤ù¢ ²òïôñ¤è¢è «ðꢫê ïô¢ôªîù¢Á ïñ¢ð¤ àôè ñè¢è÷¢ õ£ö¢è¤ù¢øùó¢.

 Þõó¢è÷¤ìñ¢ Þ¼ï¢î ªð£¼ì¢ ªêô¢õñ¢ Þõó¢è¬÷ õ¤ì¢´ð¢ «ð£è ðô õ¤îñ£ù õ£î «ï£ò¢è÷¢ âô¢ô£ñ¢ õ ðø¢ø¤è¢ ªè£í¢ìù. ñù¤î Þùî𢠠ðø¢ø¤è¢ ªè£÷¢Àñ¢ «ï£ò¢è÷£è ܼíè¤ó¤ò£ó¢ °ø¤ð¢ð¤´õù;  

 á¶è£ñ£¬ô       - àì¬ô õ¦é¢èê¢ ªêò¢»ñ¢ è£ñ£¬ô

«ê£¬è «ï£ò¢      - Þóî¢îñ¢ Þô¢ô£¬ñò£ô¢ ºèñ¢ ªõÀ á¶ñ£Áê¢

                    ªêò¢»ñ¢

ñ«è£îó «ï£ò¢     - õò¤ø¢Á õô¤

ð´õí¢           - å¼õ¬è𢠹í¢è좮

 Þï£ò¢è÷¢ âô¢ô£ñ¢ ñè¢è¬÷ð¢ ðø¢ø¤è¢ ªè£í¢ì¬ñò£ô¢ Þõó¢è÷¢ Þø «ð£õ¶ àÁî¤ âù¢ð¬î Üø¤ï¢î ñ¬ùõ¤, ñè¢è÷¢ âô¢ô£ñ¢ Þõó¢è¬÷ ªõÁ å¶è¢°è¤ù¢øùó¢. ¢ õ£ö¢õ¤ù¢ ÞÁî¤ Üî¢î¤ò£òñ¢ ªï¼é¢è¤è¢ ªè£í¢´ Þ¼ð¢¢ð¬î, ‘裴 õ£ õ£ âù¢è¤ø¶ õ¦´ «ð£ «ð£ âù¢è¤ø¶’ ñ¤è Üöè¤ò¶ñ¢ ¹èö¢ ªðø¢ø¶ñ£ù Üó¤ò ªî£ì¬ó Þõó¢ ¬èò£í¢´ â´î¢¶¬ó÷¢÷£ó¢. ñù¤î õ£ö¢õ¤ù¢ 郎ôò£¬ñ¬ò Þõó¢ â´î¢¶¬ó÷¢÷ îù¢¬ñ ñ¤è ܼ¬ñò£ùñ¢.

 î¤¼õ£´¶¬ó;

 ñò¤ô£´¶¬óò¤ô¤¼ï¢¶ °ñ¢ð«è£íñ¢ ªêô¢½ñ¢ õö¤ò¤ô¢ 20 è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ õ£´¶¬ó âù¢Âñ¢ áó¢ à÷¢÷¶. Üñ¢ð¤¬è ð² õ®õî¢î¤ô¢ Þ¬øõ¬ù õö¤ðì¢ìî£ô¢ Ýõ´¶¬ó (Ý = ð²) âù¢Á ªðòó¢ ãø¢ðì¢ì¶.

 ªê£ø¢ð¤¬ö «ïó£ õí¢íñ¢ Þ¬øõ¬ù𢠹èö¢ï¢¶ ð£ì «õí¢´ñ¢ âù¢ø °ø¤è¢«è£÷¢ à¬ìòõó£è ܼíè¤ó¤ò£ó¢ è£íð¢¢ð´è¤ø£ó¢. Þî¬ù, ‘ªê£ø¢ð¤¬öõ ó£ñ ½¬ùè¢èùè¢ èî¤î¢¶’ âù¢ø ªî£ìó¢ Íôñ¢ Üø¤òô£ñ¢.

 º¼è£! àù¢¬ù õíé¢è¤, ð¤øõ¤ð¢ ªð¼é¢èì¬ô ï¦ï¢¶è¤ù¢ø Ýø¢ø¬ô𢠪ðÁõ¬îð¢ ðø¢ø¤ ï£ù¢ ê¤ï¢î¤è¢è£¶, è£ñ ñòè¢èñ¢ ªè£í¢´ ñùî Üîù¢ õö¤ò¤ô¢ ªê½î¢î¤»ñ¢ ñè£ ªè£®òõó¢è÷¤ù¢ ï좹 ªè£í¢´ õ£öî¢ î¬ôð¢¢ð좫ìù¢.

 Þî¢î¬èòõù£è¤ò âù¢¬ù Åó¤ò å÷¤ õ¦ê, Þóî¢î¤ù𢠫ð£ó¢¬õ «ð£ó¢î¢î¶ «ð£ù¢ø àìô¤¬ùè¢ ªè£í¢ì ñò¤ô¢ õ£èùî¢î¤ù¢ ñ¦¶ Üñó¢ï¢¶ õ£´¶¬ó âù¢Âñ¢ ïô¢ô ðî¤ò¤ô¢ õ¤÷è¢èºÁñ¢ ªð¼ñ£«ù! ¬èò¤ô¢ ªð£¼÷¤ô¢ô£ âù¢¬ùè¢

èôè¢èºøê¢ ªêò¢ò¾ñ¢, ܬôê¢ê½øê¢ ªêò¢ò¾ñ¢, êô¤ð¢¹øê¢ ªêò¢ò¾ñ¢ ï¦ õ¤ìô£«ñ£ âù¢Á õ¤ù¾è¤ø£ó¢.

 î¤¼¬õò£Á;

 îë¢ê£×ó¤ô¤¼ï¢¶ 10 è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ Þõ¢×ó¢ à÷¢÷¶. Þõ¢×ó¢ è£ê¤è¢° Þ¬íò£ù ê¤ø𢹠õ£ò¢ï¢îî£èè¢ è¼îð¢¢ð´è¤ø¶. ¬õò£ø¤ù¢ ¬ñòð¢ð°î¤ò¤ô¢ äò£øð¢¢ðó¢ «è£õ¤ô¢ ܬñ÷¢÷¶. Þ被è£õ¤ô¢ ²ñ£ó¢ 15 ãè¢èó¢ ðóð¢¢ð÷õ¤ô¢ ܬñ÷¢÷¶.

 Þî¢îôî¢î¤ô¢ º¼è𢠪ð¼ñ£ù¢ õ¤ô¢, «õô¢, Üñ¢¹ Ýè¤ò ð¬ìè¢èôé¢èÀìù¢ õ¤ô¢«ôï¢î¤ò «õôõù£è î² ²ð¢ð¤óñí¤òñ¢ âù¢ø ªðò¼ìù¢ õ¤÷颰è¤ø£ó¢. Þõó¢ å¼ î¤¼ºèºñ¢ ï£ù¢° è¢èóé¢èÀñ¢ ªè£í¢´ ï¤ù¢ø 被è£ôî¢î¤ô¢ ð¤ù¢¹øñ¢ ñò¤ô¢ õ¤÷é¢èè¢ è£ì¢ê¤ î¼è¤ù¢ø£ó¢. ñò¤ô¤ù¢ ºèñ¢ ªîø¢° «ï£è¢è¤ à÷¢÷¶. º¼èð¢ªð¼ñ£ù¤ù¢ ܼè¤ô¢ Þ¼¹øºñ¢ «îõ¤òó¢ â¿ï¢î¼÷¤ à÷¢÷£ó¢. 

 Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¤ù¢ Üöè¤ò à¼õî ñùñ¢ °¬ö ð£´è¤ø£ó¢ ܼíè¤ó¤ò£ó¢. ñ¬ö¬òê¢ ªê£ó¤»ñ¢ Þ¼í¢ì «ñè«ñ£ Üô¢ô¶ Þ¼«÷£ Ãï¢îô¢;  å÷¤ ªè£í¢ì õ£÷¢è«÷£ Üô¢ô¶ ñ£«ù£ èí¢; «îõó¢è÷¤ù¢ ܼ¬ñò£ù ܺî«ñ£ Üô¢ô¶ °ò¤ô¤ù¢ °ó«ô£ ªñ£ö¤; ªè£õ¢¬õè¢ èù¤«ò£ Üô¢ô¶ ðõ÷«ñ£, Þôõ ñô«ó£ õ£ò¤îö¢; Üù¢ù«ñ£ Üô¢ô¶ 𤮫ò£ ï¬ì âù¢ªøô¢ô£ñ¢ Üö¬è ïòñ¢ðìè¢ Ãø¤ Üù¢¹ìù¢ âù¢¬ù Ýí¢ì¼÷¢è âù¢Á Þõó¢ õ¤í¢íð¢¢ðñ¢ ªêò¢è¤ø£ó¢.

è¢èì×ó¢;

 ñò¤ô£´¶¬øò¤ô¤¼ï¢¶ îóé¢èñ¢ð£® ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ ñò¤ô£´¶¬øò¤ô¤¼ï¢¶ 23 è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ è¢èì×ó¢ à÷¢÷¶. Þ¶ îø¢ªð£¿¶ è¢è¬ìÎó¢ âù¢Á õöé¢èð¢¢ð´è¤ø¶. ê¤õªð¼ñ£ù¤ù¢ Üì¢ì ×óî¢ îôé¢èÀ÷¢ Þ¶ ñ¤è¾ñ¢ ¹èö¢ ªðø¢ø¶ Ý°ñ¢.

ð¤óñÂ袰 àð«îêñ¢ ªêò¢î¼÷¤ò¶ñ¢, ñ£ó¢è¢èí¢«ìò¼è¢è£è ê¤õªð¼ñ£ù¢ âñ¬ù à¬îî¢î¼÷¤ò¶ñ¢ Þî¢îôî¢î¤ô¢î£ù¢. Þ颰 ñ£ó¢è¢èí¢«ìòó¢ âñù¤ìñ¤¼ï¢¶ ê¤õ ܼ÷£ô¢ ñ¦í¢ì£ó¢ âù¢ð¶ ¹ó£íñ¢.  âù«õ âñ ðòñ¢ ï¦è¢°ñ¢ îôñ¢ âù¢Áñ¢ Þî¬ùè¢ ÃÁõó¢. õ¦ö¤ñ¤ö¬ô, 

¬õò£Á, ¬õè£×ó¢, ªõí¢è£´ Ýè¤ò¬õ âñ ðòñ¢ ï¦è¢°ñ¢ ã¬ùò îôé¢è÷£°ñ¢.

 Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¢ å¼ î¤¼ºèìÂñ¢, ï£ù¢° è¢èóé¢èÀìÂñ¢, Þóí¢´ «îõ¤ò¼ìÂñ¢ â¿ï¢î¼÷¤»÷¢÷£ó¢. º¼èð¢ªð¼ñ£ù¢ ê¤Á °öî õ®õ¤ô¢ îù¢ î£ò¢ ð£ó¢õòî¢ î¿õ¤ò 郎ôò¤ô¢ à÷¢÷ è£ì¢ê¤ è£íî¢îè¢èñ¢.

 °ìõ£ò¤ô¢;

°ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ õ£Ïó¢ ªêô¢½ñ¢ õö¤ò¤ô¢ °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶

15 è¤.ñ¦. Éóî¢î¤ô¢ °ìõ£ò¤ô¢ à÷¢÷¶. Þî¬ù Þð¢ªð£¿¶ °ìõ£êô¢ âù¢Á ܬöè¢è¤ù¢øùó¢.

 «õô¢ «ð£ù¢ø¶ñ¢, ïê¢²î¢ îù¢¬ñ à¬ìò¶ñ£ù èí¢è¬÷ à¬ìò õ¤¬ô ñ£îó¢è÷¤ù¢ õòð¢¢ð좴 Üô¢ô½Áñ¢ âù¢¬ù Ý좪è£í¢´ õ®ð¢«ðø¢ø¤¬ùî¢ îù袰 ܼÀñ£Á ܼíè¤ó¤ò£ó¢ «õí¢´è¤ø£ó¢.

°ñ¢ð«è£íñ¢;

 è£õ¤ó¤è¢è¬óò¤ô¢ ܬñ÷¢÷ Þõ¢×ó¢ «ê£öó¢è÷¤ù¢ î¬ôïèóñ£è õ¤÷é¢è¤òî£è õóô£ø¢Á Üø¤ëó¢è÷¢ °ø¤ð¢ð¤´õó¢. õìï£ì¢®ô¢ ï¬ìªðÁñ¢ °ñ¢ð«ñ÷£¬õ𢠫ð£ô 12 Ýí¢´èÀ袰 强¬ø ñè£ñèñ¢ ñ¤èê¢ ê¤øð¢ð£è Þé¢°è¢ ªè£í¢ì£ìð¢¢ð´ñ¢. àôè𢠹èö¢ ªðø¢ø èí¤î«ñ¬î Þó£ñ£Âêó¢ Þ颰î£ù¢ ð¤øï¢î£ó¢. Þî¢îôñ¢ «îõ£óé¢è÷¤ô¢ °ìÍ袰 âù¢Á °ø¤è¢èð¢ªðø¢Á÷¢÷¶. ªîù¢ùèî¢î¤ù¢ «èñ¢ð¤ó¤ì¢ü¢ âù¢Á ܬöè¢èð¢¢ð´ñ¢ 150 Ýí¢´è÷¢ ðö¬ñò£ù èô¢Öó¤ åù¢Áñ¢ Þï¢ïèóî¢î¤ô¢ à÷¢÷¶.

 Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¤ìñ¢ Üö¤õîø¢è¤ìñ£ù àì¬ô𢠫ðµõô»ñ¢ ªðí¢ «ñ£èñ¢ ªè£í¢´ñ¢ îø¤ªè좴 ܬô»ñ¢ îù¢¬ù ñ¦ì¢ªì´î¢¶ õ®ð¢«ðÁ ܼ÷ «õí¢´ñ£ò¢ º¼è𢠪ð¼ñ£ù¤ìñ¢ ܼíè¤ó¤ò£ó¢ «õí¢´è¤ø£ó¢.

 ê¤è¢èô¢;

 î¤¼õ£Ïó¤ô¤¼ï¢¶ ï£èð¢¢ð좮ùñ¢ ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ 8 è¤.ñ¦.ªî£¬ôõ¤ô¢ ê¤è¢èô¢ âù¢Âñ¢ áó¢ à÷¢÷¶. ªõí¢ªíò¤ù£ô¢ ê¤õô¤é¢èî¢ î¤¼«ñù¤¬ò à¼õ£è¢è¤ õê¤ì¢ìó¢ õö¤ðì¢ì£ó¢ âù¢Áñ¢ õö¤ð£ì¢´è¢°ð¢ ð¤ø° Üî¬ù â´è¢è ºø¢ðì¢ì ªð£¿¶ â´è¢è º®ò£ñô¢ ê¤è¢èô¢ ãø¢ðì¢ìî£ô¢ Þð¢ªðòó¢ ãø¢ðì¢ìî£è¢è °ø¤ð¢ð¤´õó¢.  Þõ¢×ó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£Â袰 ê¤é¢è£ó «õôó¢ âù¢Á ªðòó¢. Þõ¢×ó¤ô¢ Åóêñ¢ý£ó õ¤ö£ ñ¤è¢è ê¤øð¢¢ð£ù º¬øò¤ô¢ ï¬ìªðÁñ¢.

 Þî¢î¤¼î¢îôî¢î¤ù¢èí¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¤ù¢ ¾¼õè¢ è£ì¢ê¤¬ò ñ¤èî¢ ªî÷¤õ£è ܼíè¤ó¤ò£ó¢ ð¤ù¢õ¼ñ£Á ð ªêò¢¶÷¢÷£ó¢; ê¤õï¢î ªõì¢ê¤ ñ£¬ô¬òî¢ î¤¼ñ£ó¢ð¤«ô Å®òõù¢; õ¤ô¢ «ð£ù¢ø ¹¼õº¬ìòõù¢; ¬ñ Ìê¤ò èí¢è¬÷ à¬ìòõù¢; °é¢°ñ𢠪ð£ì¢´ Üí¤ï¢î å÷¤ õ¦²ñ¢ ªïø¢ø¤¬ò à¬ìòõù¢. Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ùê¢ ê¤é¢è£ó «õôù¢ âù¢Á Þõó¢ Üù¢ªð£¿è ܬöè¢è¤ø£ó¢.

 î¤¼ê¢ªêé¢è£ì¢ì颰®;

 ïù¢ù¤ôî¢î¤ô¤¼ï¢¶ õ£Ïó¢ ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ 8è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ ꢪêé¢è£ì¢ì颰® à÷¢÷¶. Þ颰 õ¤ï£òè𢠪ð¼ñ£ù¢ èüºè£²ó¬ùè¢ ªè£ù¢ø¬ñò£ô¢ Üõù¢ àìô¤ù¤ù¢Áñ¢ Þóî¢îñ¢ ªð¼è¢ªè´î¢¶ æ®ò¶. Þîù£ô¢ Þõ¢õ¤ìñ¢ º¿õ¶ñ¢ ªêï¢ï¤øñ£ò¤ø¢Á. Þîù£ô¢ ªêé¢è£´ âù¢Á ܬöè¢èð¢¢ðì¢ì Þõ¢õ¤ìñ¢ ð¤ù¢ùó¢ ªêé¢è£ì¢ì颰® âù¢Á ñ¼õ¤ø¢Á.

 Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù èï¢î«ù, °ñó«ù, ñò¤ô¢õ£èù«ù âù¢ªøô¢ô£ñ¢ ܼíè¤ó¤ï£îó¢ ܬö ñè¤ö¢è¤ø£ó¢. àôè¤ô¢õ£¿ñ¢ ñè¢è÷¢ âî¢î¬èòõó¢è÷£è õ£ö¢è¤ù¢ø£ó¢è÷¢ âù¢ð¬î ñ¤èî¢ ªî÷¤¾ðì ð¤ù¢õ¼ñ£Á °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.

 Ã®è¢è÷¤ð¢¢ðõó¢è÷¢; õë¢êè å¿è¢èñ¢ à¬ìòõó¢è÷¢; ñ£ð£îñè£è¤ò ªè£¬ô»ñ¢ ªêò¢ò Üë¢ê£îõó¢è÷¢; °®¬òè¢ ªè´ð¢¢ðõó¢è÷¢; Ü颰ñ¢ Þ颰ñ¢ å¼ «õ¬ô»ñ¤ù¢ø¤î¢ î¤ó¤è¤ù¢øùó¢; Üôé¢è£óî¢ «î£÷¤ùó¢; ðí ݬê à÷¢÷õó¢è÷¢; ê£î¤ «ðîñ¢ ð£ó£ì¢´ñ¢ êí¢ì£÷ó¢è÷¢.

 Þî¢î¬èò Þö¤°íé¢è÷¢ 郎øï¢î ñè¢è÷¢ ñî¢î¤ò¤«ô ï£ù¢ õ£ö¢ï¢¶ õ¼è¤«øù¢. âù¢¬ùÞõ¢¾ôè õ£ö¢õ¤ù¤ù¢Á õ¤´õ¤î¢¶ ܼ÷¢ ªêò¢ò «õí¢´ñ¢ âù¢Á èê¤ï¢¶¼èð¢ ð£´è¤ø£ó¢ ܼíè¤ó¤ò£ó¢.

 îë¢ê£×ó¢;

 îë¢ê£×ó¢ ñ£õì¢ìî¢ î¬ôïèóñ£è õ¤÷颰è¤ø¶. Þõ¢×ó¤ô¢ ºø¢è£ôî¢î¤ô¢ õ£ö¢ï¢î îë¢êù¢ âù¢ø ܲóù¢ ñè¢è¬÷î¢ ¶ù¢¹Áî¢î¤òî£è¾ñ¢ Üîù£ô¢ ê¤õªð¼ñ£ù¢ Üõ¬ù õîñ¢ ªêò¢îî£è¾ñ¢ Þîù¢ ªð£¼ì¢´ Þõ¢×ó¢ îë¢ê£×ó¢ âù¢ø¬öè¢èð¢¢ðì¢ìî£è¾ñ¢ ÃÁõó¢.

 Þõ¢×ó¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¤ìñ¢ Üöè¤ò èí¢è¬÷ à¬ìò ªðí¢è÷¤ù¢ð£ô¢ è£ñ ñòè¢èô ß´ð좴, àù¢¬ù õö¤ðì£ñô¢ ð¤ó¤è¢°ñ¢ ñ£ò õ¤î¢¬îò¤ù¤ù¢Áñ¢ âù¢¬ù õ¤´õ¤î¢¶, Þ颫è õ£ âù¢Á âù¢¬ù ܬö àí¢¬ñ𢠪𣼬÷ âù袰 àð«îê¤î¢¶ ܼ÷¢õ£ò£è âù¢Á ܼíè¤ó¤ò£ó¢ ªï袰¼èð¢ ð£´è¤ø£ó¢.

 ðï¢îïô¢Öó¢;

 Þ¬øõ¤ Ý®ò ð õ ܬíï¢î áó¢ âù¢ðî£ô¢  ðï¢î¬íïô¢Öó¢ âù¢Á Þ¶ ܬöè¢èð¢¢ðì¢ìî£è êñòõ£î¤è÷¢ ÃÁõó¢. ºîô£ñ¢ Þó£êó£ê «ê£öù¢ è£ôî¢¶è¢ èô¢ªõ좴 åù¢Á Þõ¢×¬óð¢ ðï¢î¬íïô¢Öó¢ âù¢«ø °ø¤ð¢ð¤´è¤ø¶. îø¢ªð£¿¶ Þõ¢×ó¢ ðï¢îïô¢Öó¢ âù¢Á ñ¼õ¤ õö颰è¤ø¶.

  Þõ¢×ó¢ ñò¤ô£´¶¬øò¤ô¤¼ï¢¶ °ñ¢ð«è£íñ¢ Þ¼ð¢¹ð¢ð£¬î õö¤î¢îìî¢î¤ô¢ °î¢î£ôñ¢ ªî£ìó¢ õí¢® 郎ôòî¢î¤ø¢° õì«ñø¢è¤ô¢ 9è¤.ñ¦.ªî£¬ôõ¤ô¢ ܬñ÷¢÷¶. Þõ¢×¼è¢°è¢ °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ «ïó®ð¢ «ð¼ï¢¶ð¢ «ð£è¢°õóñ¢ à÷¢÷¶.

 âù¢Â¬ìò õ¼î¢îªñô¢ô£ñ¢ °¬ø åö¤ò¾ñ¢, àù¢Â¬ìò õ¼÷¢ âù¢ ñ¦¶ «ññ¢ð좴𢠪ð¼è¾ñ¢, Þ¬ê»ì«ù ðó¤²î¢îñ£ù àù¶ ð¢¹è¬ö ï£ù¢ æî¾ñ¢, ê¤õ ê¤õ âù¢Á àù¢ ï£ñî ï£ù¢ ºöé¢è¾ñ¢, Üîù£ô¢ âù¢ ªï뢲 ªð£ô¤¾ ªðø¾ñ¢ àù¢ õ®è¬÷ âùè¢°î¢ îï¢î¼÷¢è âù¢Á Þõó¢ º¼è𢠪ð¼ñ£ù¤ìñ¢ º¬øò¤´è¤ø£ó¢.

 î¤¼ð¢¢ðùï¢î£÷¢;

 Þõ¢×ó¢ ñò¤ô£´¶¬øò¤ô¤¼ï¢¶ °ñ¢ð«è£íñ¢ Þ¼ð¢¹ð¢ð£¬î õö¤î¢îìî¢î¤ô¢ Ý´¶¬ø ªî£ìó¢ õí¢® 郎ôòî¢î¤ø¢° õìè¢è¤ô¢ 12è¤.ñ¦.ªî£¬ôõ¤ô¢ ܬñ÷¢÷¶. °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ «ð¼ï¢¶ õêî¤èÀñ¢ à÷¢÷ù. Þõ¢×ó¢ °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ ªêù¢¬ù ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ 18è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ à÷¢÷¶.

 ð¬ùñóîî¢ îô õ¤¼ì¢êñ£èè¢ ªè£í¢ì¬ñò£ô¢ Þõ¢×ó¢ ðùï¢î£÷¢ âù¢Á ܬöè¢èð¢ªðø¢ø¶. ð¢¢ð¬ùï¢î£÷¢ âù¢ð¶ Þð¢ªð£¿¶ ð¢¢ðùï¢î£÷¢ âù¢Á ñ¼õ¤ õö颰è¤ø¶. î£ì¬èò£ô¢ õö¤ðìð¢¢ðì¢ì¬ñò£ô¢ Þõ¢×ó¢ î£ì¬è ßê¢êóñ¢ âù¢Áñ¢ ܬöè¢èð¢¢ðì¢ì¶. 

Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¢ å¼ î¤¼ºèºñ¢, ï£ù¢° è¢èóé¢èÀñ¢ ªè£í¢´ ñò¤ô¤ù¢ ܼè¤ô¢ ï¤ù¢ø 被è£ôî¢î¤ô¢ Þ¼¹øºñ¢ õ÷¢÷¤ «îõ«êù£«îõ¤ ê«ñîó£è è£ì¢ê¤ò÷¤è¢è¤ø£ó¢. å¼ àø¢êõó¢ Íôõ¬ó𢠫ð£ù¢Áñ¢ ñø¢ªø£¼ àø¢êõó£ù ºî¢¶è¢°ñ£óê£ñ¤       ñò¤ô¤ù¢ø¤»ñ¢ è£ì¢ê¤ î¼è¤ø£ó¢.

ñò¤ô£´¶¬ø;

ñ£òõóñ¢, ñ£Îóñ¢ âù¢ªøô¢ô£ñ¢ ܬòè¢èð¢¢ðì¢ì Þõ¢×ó¢ Þð¢ªð£¿¶ ñò¤ô£´¶¬ø âù¢Á õöé¢èð¢¢ð´è¤ø¶. ð¤óñ¢ñ «îõù¢ Þî¢îôî¢î¤ô¢ à¬ø»ñ¢ Þ¬øõ¬ù õö¤ðì¢ì£ù¢ âù¢ð¶ äî¦èñ¢. ð£ó¢õî¤ «îõ¤ ñò¤ô¢ à¼õñ¢ ªè£í¢´  ê¤õªð¼ñ£¬ù Þõ¢×ó¤½ñ¢ ñò¤ô£ð¢Ìó¤½ñ¢ õö¤ðì¢ìî£èè¢ ÃÁõó¢. Þî¢î¬èò ðô ê¤øð¢¹è¬÷ð¢ ð¬øê£ø¢Áñ¢ õ¬èò¤ô¢ Ýò¤óñ£ù£½ñ¢ ñ£Îóñ¢ «ð£ô¢ Ý裶 âù¢ø ðöªñ£ö¤ õöè¢è¤ô¢ à÷¢÷¶ °ø¤ð¢ð¤ìî¢îè¢èñ¢.

Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù𢠹èö¢ï¢¶ å¼ ð£ìô¢ 𣮻÷¢÷£ó¢ ܼíè¤ó¤ï£îó¢. Þð¢ð£ìô¤ô¢ îù袰 º¼è𢠪ð¼ñ£ù¤ù¢ õ¼ì¢«ðÁ 褬ìè¢è𢠪ðø¢ø¬ñ¬ò ‘âù¢Â¬ìò ºñ¢ñôé¢è¬÷»ñ¢ ÜÁî¢¶î¢ ªî£¬ô, ð£´õ£ò£è âù Ë âùè¢°î¢ î¤¼õ¼÷¢ ð£ô¤è¢è, Üîù¢ð® Ü®«òù¢ àù¢¬ù𢠹èö¢ï¢¶ ð£®ù, à¿õôù¢¹ìù¢ ð£®ù ð£ìô¢è¬÷ ªñê¢ê¤ð¢ ð¤ó¤òð¢¢ð좴 «ñô£ù «ðø¢ø¤¬ù âù袰 ܼ÷¤ù º¼è«ù!’ âù¢Á ñè¤ö¢ê¢ê¤ð¢ ªð£é¢è ܼíè¤ó¤ò£ó¢ °ø¤ð¢ð¤´è¤ø£ó¢.

õô뢲ö¤;

 °ñ¢ð«è£íî¢î¤ô¤¼ï¢¶ îë¢ê£×ó¢ ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ 6è¤.ñ¦. ªî£¬ôõ¤ô¢ ²õ£ñ¤ñ¬ô袰 ܼè¤ô¢ õô뢲ö¤ âù¢ø áó¢ ܬñ÷¢÷¶.

 Ýêìù¢ ªõ÷¤ð¢ðì¢ì ð÷¢÷î¢î¤Â÷¢ (ð¤ôî¢î¤Â÷¢) ªêù¢Áõ¤ì¢ì è£õ¤ó¤ ªõ÷¤ð¢¢ð´ñ¢ ªð£¼ì¢´ ãóí¢ì ºù¤õó¢ Üð¢ð¤ôî¢î¤Â÷¢ Þøé¢è, è£õ¤ó¤ ªõ÷¤õ õôð¢¢ðè¢èñ£è ²ö¤î¢¶è¢ ªè£í¢ì¬ñò£ô¢ Þð¢ªðòó¢ ãø¢ðì¢ì¶ âù¢ð¶ ¹ó£íñ¢. Þî¢îôî¢î¤ô¢ Þï¢î¤óù¢ ªõ÷¢¬÷ð¢ ð¤÷¢¬÷ò£¬ó ¬õ õö¤ðì¢ìî£è¾ñ¢ ê£ù¢«ø£ó¢ ÃÁõó¢. ð¤÷¢¬÷ò£ó¤ù¢ ¶î¤è¢¬è𢠪ðó¤¶ñ¢ Þìð¢¢ðè¢èñ£è«õ ²ö¤ï¢î¤¼è¢°ñ¢. Ýù£ô¢ Þ颰 à÷¢÷ ð¤÷¢¬÷ò£ó¤ù¢ ¶î¤è¢¬è õôð¢¢ðè¢èñ£è ²ö¤ï¢î¤¼ð¢¢ð¶ ê¤øð¢ð£è𢠫ð£ø¢øð¢¢ð´è¤ø¶. 

Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù èô£ð ñò¤ô«ù! «ò£è¤è÷¢ ðè¢èî¢î¤ô¢ õ¤÷颰ñ¢ ²õ£ñ¤«ò! Üöè¤ò õô뢲ö¤ò¤ø¢ ªêô¢õ«ù! «îõó¢è÷¢

ªð¼ñ£«ù! âù¢ªøô¢ô£ñ¢ õ¤÷¤î¢¶ ªð¼ñ£ù¤ù¢ õ¼¬÷ ܼíè¤ó¤ò£ó¢ «õí¢´è¤ø£ó¢.

 ¬õî¢î¦²õóù¢«è£õ¤ô¢;

 «îõ£ó è£ôî¢î¤ô¢ ¹÷¢÷¤¼è¢°«õÙó¢ âù¢Á ܬöè¢èð¢¢ðì¢ì Þõ¢×ó¢ îø¢ªð£¿¶ ¬õî¢î¦²õóù¢«è£õ¤ô¢ âù¢ø ªðòó¤ô¢ õöé¢èð¢¢ð´è¤ø¶. Þõ¢×ó¢ ñò¤ô£´¶¬øò¤ô¤¼ï¢¶ ê¤îñ¢ðóñ¢ ªêô¢½ñ¢ ꣬ôò¤ô¢ 13è¤.ñ¦. Éóî¢î¤ô¢ à÷¢÷¶.

 

º¼è𢠪ð¼ñ£ù¢ õ÷¢÷¤ ªîò¢õ£¬ù»ìù¢ â¿ï¢î¼÷¤ò¤¼î¢îô¢

 

Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼èð¢ªð¼ñ£ù¢ ºî¢¶è¢°ñ£ó²õ£ñ¤ âù¢ø  î¤¼ï£ñî¢î¤ô¢ ܬöè¢èð¢¢ð´è¤ø£ó¢. ªð¼ñ£ù¢ è¤ö袰 «ï£è¢è¤è¢ è£ì¢ê¤ Ü÷¤è¢è¤ø£ó¢. ܲóù¢ Åóð¶ñ¬ù Üö¤è¢è ªð¼ñ£ù¢ «õô¢ ªðø¢ø¶ Þî¢îôî¢î¤ô¢î£ù¢. Þî¢îôî¢î¤ô¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£ù¢ ñ¦¶ °ñó°¼ðóó¢ ºî¢¶è¢°ñ£ó²õ£ñ¤ ð¤÷¢¬÷î¢ îñ¤ö¢ 𣮻÷¢÷£ó¢.

 ñ£¬òò£ô¢ Þõ¢¾ôè õ£ö¢õ¤ô¢ Üô¢ô½Áñ¢ âù袰 Þóé¢è¤ ð¤ø𢹠Þø𢹠ï¦è¢è¤ âù袰 «ñ£ì¢ê õ¦ì¢¬ìî¢ îï¢î¼÷¢è âù¢Á Þ颰 â¿ï¢î¼÷¤»÷¢÷ º¼è𢠪ð¼ñ£¬ù ܼíè¤ó¤ò£ó¢ «õí¢´è¤ø£ó¢.

 º®¾¬ó;

 î¤¼ë£ùêñ¢ðï¢îó¢, è¢èóêó¢, ²ï¢îóó¢ Ý褫ò£ó¤ù¢ î£í¢®¬ù𢠫ð£ô«õ ܼíè¤ó¤ò£ó¤ù¢ î£í¢´ñ¢ ܬñï¢î¤¼ð¢¢ð¬îè¢ è£í º®è¤ù¢ø¶. Þõó¢ º¼èù¢ â¿ï¢î¼÷¤»÷¢÷ îôé¢è÷¢ «î£Áñ¢ ªêù¢Á  ªð¼ñ£ù¤ù¢ ܼì¢î¤øî õ¤ò «ð£ø¢ø¤ò¬ñ¬ò Þè¢è좴¬ó õ£ò¤ô£è õ¤÷é¢è¤è¢ ªè£÷¢÷ô£ñ¢. «ñ«ô Ãøð¢¢ð좴÷¢÷ ªêò¢î¤è÷¢ ê£ù¢Áè¢è£è

õ¤÷è¢èð¢¢ð좴÷¢÷ù«õ Üù¢ø¤ ºø¢ø º®ï¢î¬õò£ù¬õ Üô¢ô. Þð¢ªð£¼í¢¬ñò¤ô¢ «ñ½ñ¢ Ýöñ£è ªõ÷¤ð¢¢ð´î¢î «õí¢®ò ªêò¢î¤è÷¢ ãó£÷ñ£è à÷¢÷ù. Þ¶ ß«ìø ܼíè¤ó¤ò£ó¤ù¢ õ£ó¢î¢¬îè÷¤ô¢ ªê£ô¢ô «õí¢´ñ£ò¤ù¢ º¼èð¢ªð¼ñ£ù¤ù¢ õ¼÷¢ ¬èÃì «õí¢´ñ¢.

 ðòù¢ªè£í¢ì¬õ;

 1. ta.wikipedia    2. deevaram.senthamil.org/temple

  1. www.thevaaram.org/thirumurai   4. vaaramorualayam.blogspot.com
  1. tamil.mywebdunia  º¼è«õ÷¢ ðù¢ù¤¼ º¬ø (ªî£°î¤-2), ªïô¢«õô¤ ¬êõ      ê¤î¢î£ï¢î Ëø¢ðî¤ð¢¹è¢ èöèñ¢, 1992.

 

 


ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்


சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் தமிழ்க் கவிஞராகவும் தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் இவருக்கென்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர் பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர். இவர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமைத் திறன்களை எடுத்துரைக்கும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.

ஆளுமைத்திறன்


நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 75 பாடல்கள் தனி மனித ஆளுமைகளை எடுத்துரைக்கும் தன்மையில் அமைந்துள்ளன.(காண்க; ‘நீதிநெறி விளக்கத்தில் தனிமனித நீதிகள்’, குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 1, ப. 254.) அதாவது தனி மனிதனுக்குரிய நீதிகளை எடுத்துரைத்து அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்க இந்நூல் முயல்கிறது.

நிலையாமை


நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்

நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் - என்னே

வழுத்தாதது எம்பிரான் மன்று (நீ.நெ.வி. 1)


என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனி மனித ஆளுமைத்திறனை நன்கு எடுத்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.


மனிதப் பிறவியும், இப்பிறவியில் சேர்க்கும் செல்வமும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதர்கள் மிகவும் நம்புகிறார்கள்¢. இதனால் எப்பாடு பட்டாவது செல்வத்தைச் சேர்ப்¢பதில் முனைப்பாய் நிற்கிறார்கள். செல்வத்தைப் பெறுவதற்கு தீய வழியாய் இருந்தாலும் கூட கவலையின்றி அதனைச் செய்கிறார்கள். இதனால் தனி மனித நியாயங்கள் பறிக்கப்¢படுகின்றன. வலியவர் வாழ்வதும் எளியவர் வீழ்வதும் அன்றாடம் உலகில் அரங்கேறுகின்றன. இந்த எண்ணம் மனிதர்களிடையே
அகற்றப்பட்டு விட்டால் நாட்டில் அதர்மங்கள் பெருக வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்தவராக குமரகுருபரர் விளங்குகிறார்.


இதனால்தான் குமரகுருபரர், இளமைப் பருவம் நீர்க்குமிழி; மனிதனால் சேர்க்கப்¢படும் செல்வம் நீரில் எழுகின்ற அலை; மனித உடல் நீரில் எழுதப்¢படுகின்ற எழுத்து என்று தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் தனி மனித குணங்கள் மேம்படும். தனி மனித குணங்கள் மேம்பட்டால் அவன் சார்ந்த சமுதாயம் சிறப்படையும்.

கல்வி


தனி மனித ஆளுமை வளர்ச்சியில் மிகவும் இன்றியமையாத பங்கெடுப்¢பது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த குமரகுருபரர் கல்வியின் சிறப்பு, பயன், கல்லாமையின் இழிவு, கல்வியைக் காசாக்குவோர் நிலை ஆகியன பற்றி 25 பாடல்களில் விரிவாகப் பேசுகிறார். இதனால்தான் கல்வியைச் ‘சிற்றுயிர்க்கு உற்ற துணை’ (நீ.நெ.வி. 2) என்றும், கற்புடைய மனைவி, செல்வப் புதல்வன் (நீ.நெ.வி. 4) என்றும் இவர் குறிப்பிடுகிறார்.


ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறர்க்கு அஞ்சாது எடுத்துரைக்க வேண்டும். அதுபோல தம்மைவிட அறிவில் மிக்கார் கூடியுள்ள அவையில் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் அதனைப் பற்றிப் பேசுவதற்கு அஞ்ச வேண்டும். அதாவது அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுதலும் அஞ்சத்தகாதனவற்றிற்கு அஞ்சாதும் வாழ்தல் வேண்டும். இத்திறம் நல்ல மனிதர்களுக்குரிய ஆளுமைப் பண்பாகும்.

இதனையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (குறள்.428)
என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.

செருக்கின்மை


ஒருவர் அனைத்திலும் தாமே மேலானவர் என்று செருக்குக் கொள்ளுதல் அழிவிற்கு வித்தாகும். எனவே வாழப் பிறந்த மனிதர்கள் செருக்கற்றவர்களாக இருத்தல் வேண்டும்.


நம்மைவிட செல்வத்தில் குறைந்தாரை நோக்கி நாம் அவர்களை விட மிகுந்த செல்வம் உடையேம் என்று மன நிறைவு கொள்ள வேண்டும். அதேவேளையில் நம்மைவிட கல்வியில் மிக்காரைப் பார்த்து நாம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எண்ணுதல் வேண்டும். இதனை விடுத்துத் தாமே செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுதல் செருக்காகும். செருக்குடையவர்கள் வாழ்வு சருக்கி விடும் என்பது குமரகுருபரரின் துணிபாகும். இதனை,


தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை

அம்மா பெரிதென் றகமகிழ்க - - தம்மினும்

கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்

இவர்க்குநாம் என்று தாமே (நீ.நெ.வி. 15)
முயற்சி

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்; விதியை மதியால் வெல்லலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முதுமொழிகளாகும். இதனை வள்ளுவரும்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர் (குறள்.620)


என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் ஒருவர் பெறும் உயர்வுகளுக்கு அவர்தம் முயற்சிகளே காரணமாகின்றன.


தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்த நினைக்கும் ஒருவர் தம்முடைய உடல் துன்பம், உள்ளப் பசி, தூக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று குமரகுருபரர் கருதுகிறார். இதனை,
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் .......................... ..................... ................... ........................ கருமமே கண்ணாயி னார் (நீ.நெ.வி.53)
என்று இவர் குறிப்பிடுகிறார்.


தெரிந்து முயலுதல்


முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும்கூட ஒன்றைச் செய்ய முயல்வதற்கு முன்பு அச்செயலைச் செய்வதற்குரிய காலம், இடம், காரணம், பயன் ஆகியவற்றை ஆராய்ந்து ஈடுபடுதல் இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற இயலும். இதனை,


காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின்

மூலமறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன

சூழாது துணைமை வலிதெரிந்து

ஆள்வினை ஆளப் படும். (நீ.நெ.வி.53)


என்று நீதிநெறி விளக்கம் வுறுத்துகிறது. எனவே, தெரிந்து முயலுகின்ற ஆளுமைத்திறன் பெற்றவரால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பது புலனாகிறது.


வஞ்சகம் புரியாமை


மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும் வஞ்சித்தும் வாழத்தலைப்படுகின்றனர். இது மிகவும் கொடிய செயலாகும். இங்ஙனம் வஞ்சித்தொழுகுவாரை மதியற்றவர்கள் என்று குமரகுருபரர் சாடுகிறார். பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்களுக்கு அப்பொழுது வேண்டுமானால் ஒருவரை வஞ்சித்து விட்டோம் என்ற உணர்வு மேலிடலாம். இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே ஆகும். ஒருவர் பிறரை ஏமாற்றுவதையும் வஞ்சிப்பதையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எனவே அதற்கான தண்டனைக் கிடைக்கப்பெற்றேத் தீரும் என்பதை,


வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்

வஞ்சித்தோம் என்று மகழன்மின் - வஞ்சித்த

எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி

அங்கம் குலைவது அறிவு (நீ.நெ.வி.94)

என்னும் பாடலில் குமரகுருபரர் அறிவுறுத்துகிறார். ஆதலால் நல்ல மனிதர்களாக உலகை வலம் வர விரும்புகின்ற நல்லவர்கள் வஞ்சக எண்ணமில்லா ஆளுமைப்¢பண்பு நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

சிற்றின்பம் நாடாமை


பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது பழமொழி. இதன்பொருள் நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்களும் நல்லவர்காளாவர் என்பதாகும். பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது மற்றொரு பழமொழி. இதன்பொருள் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்களும் தீயவர்காளாகி விடுவர் என்பதாகும்.


உலகில் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்கள் கெடுவதைத்தாம் மிகுதியாகப் பார்க்கிறோம். நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்கள் திருந்துதல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் குமரகுருபரரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்பாடல் இதுதான்;

சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்

மற்றினபம் யாவையும் கைவிடுவர் - முற்றுந்தாம்

பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ

பாரின்பப் பாழ்ங்கும்பி யில் (நீ.நெ.வி.88)

அதாவது பேரின்பத்தை விரும்புகின்றவர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பத்தை விரும்பினார் மற்றின்பத்தை எல்லாம் கைவிடுவர்.
எனவே சிற்றின்பத்தை விரும்பாது வாழ்தல் என்பது தனி மனித ஆளுமைத் திறனாகக் கொள்ளலாம். இதனைத்தான் வள்ளுவரும் சிற்றினஞ்சேராமை என்று வலியுறுத்துகிறார்.

நயத்தகு நாகரிகம்

ஒருவன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்தல் வேண்டும். ஆனால் சிலர் தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று வாய்ச்சவடால் பேசுவர். செய்தற்கு அரிதினும் அரிதான காரியங்களைத் தான் செய்து முடிப்பேன் என்று கூறிவிட்டு அதனைச் செயலில் காட்டாமல் பேச்சளவில் மட்டுமே நிற்பர். இத்தகையோரை நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகமாகச் சாடுகிறார் குமரகுருபரர். எனவே, மனிதர்கள் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழும் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.

பிறன்மனை நயவாமை

ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். பேராண்மை என்றால் பெரிய வீரம என்று பொருளாகும். பிறன் மனை நோக்காத் தன்மையே பேராண்மை என்பது வள்ளுவம். இதனை,


பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)


என்னும் திருக்குறள் சுட்டுகிறது. இதனை நீதிநெறி விளக்கமும் வலியுறுத்துகிறது. பிறன்மனை விரும்பிச் செல்வான் உடலும் உள்ளமும் நடுக்கமுற்றுத் தீரா நோயுறுவான் என்று நீதிநெறி விளக்கம் (நீ.நெ.வி.77) எச்சரிக்கை செய்கிறது.


ஈகையும் இன்சொல்லும்

ஒருவர் தம்மிடமிருக்கும் பொருளை ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து வழங்குதல் வேண்டும். அங்ஙனம் வழங்குதல் மிகுந்த இன்பத்தைத் தரவல்லது. பிறருக்கு வேண்டுவனவற்றை வழங்காமல் தம்மிடம் உள்ள பொருட்செல்வத்தை இழப்¢பவர்கள் அதனால் ஏற்படும் இன்பத்தை அறியாதவர்களாவர். இதனை,

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)


என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.


இதனைக் குமரகுருபரர், ஈயாக் குணம் கொண்ட செல்வந்தரின் செல்வத்தைக் காட்டிலும் ஈயும் குணம் கொண்டவரின் வறுமை மேலானது என்று ஈகையின் பெருமையை எடுத்துரைக்கிறார். இதனை,

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல............ (நீ.நெ.வி.67)

எனனும் வரிகள் தௌ¤வுறுத்துகின்றன.


பிறருக்குப் பொருள் கொடுத்து உதவும்பொழுது இனிய சொற்களைக் கூறி அளித்திடல் வேண்டும். அதாவது முகமலர்ச்சியோடு வழங்குதல் வேண்டும். ஈகை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது இன்சொல் கூறுதலும் ஆகும். ஒருவேளை ஈகை செய்ய முடியாமல் போனால் இனிய சொற்களையாவது கூறுதல் வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில்,


ஈகை யரிதெனினும் இன்சொளினும் நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிதம்மா ...... (நீ.நெ.வி.68)

என்னும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. எனவே, ஈகையும், இன்சொல் கூறலும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.


எனவே, குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் தனிமனித ஆளுமைப் பண்புகளை மிகுதியும் எடுத்துரைத்துள்ளமையைக் காண முடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தாக்கங்களைத் தொகுத்து நோக்குங்கால்அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்;


• மனம், மொழி, மெய்களால் தீமை செய்யாதிருக்க வேண்டும்

• தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்

• பயன் சிறிதாயினும் விடா தொடர் முயற்சி செய்தல் வேண்டும்

• எண்ணித் துணிதல் வேண்டும்

• கருமமே கண்ணாயிருக்க வேண்டும்

• பிறரின் சிறிய குணங்களை இகழாது அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்

• நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாதிருக்க வேண்டும்

• தன்மானத்தை விற்றுப் பொருள் ஈட்டாதிருக்க வேண்டும்

• ஒருவனுக்கு ஒருத்தி என்று உண்மையாய் வாழ வேண்டும்
இவற்றைப் பின்பற்றி மானிட சமுதாயம் வாழத் தலைப்¢படுகின்ற பொழுது வீடும் நாடும் ஒருசேர உயரும் என்பது திண்ணம்.






நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்
சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் தமிழ்க் கவிஞராகவும் தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் இவருக்கென்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர் பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.
இவர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமைத் திறன்களை எடுத்துரைக்கும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.
ஆளுமைத்திறன்
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 75 பாடல்கள் தனி மனித ஆளுமைகளை எடுத்துரைக்கும் தன்மையில் அமைந்துள்ளன.(காண்க; ‘நீதிநெறி விளக்கத்தில் தனிமனித நீதிகள்’, குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 1, ப. 254.) அதாவது தனி மனிதனுக்குரிய நீதிகளை எடுத்துரைத்து அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்க இந்நூல் முயல்கிறது.
நிலையாமை
நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் - என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று (நீ.நெ.வி. 1)
என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனி மனித ஆளுமைத்திறனை நன்கு எடுத்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.
மனிதப் பிறவியும், இப்பிறவியில் சேர்க்கும் செல்வமும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதர்கள் மிகவும் நம்புகிறார்கள்¢. இதனால் எப்பாடு பட்டாவது செல்வத்தைச் சேர்ப்¢பதில் முனைப்பாய் நிற்கிறார்கள். செல்வத்தைப் பெறுவதற்கு தீய வழியாய் இருந்தாலும் கூட கவலையின்றி அதனைச் செய்கிறார்கள். இதனால் தனி மனித நியாயங்கள் பறிக்கப்¢படுகின்றன. வலியவர் வாழ்வதும் எளியவர் வீழ்வதும் அன்றாடம் உலகில் அரங்கேறுகின்றன. இந்த எண்ணம் மனிதர்களிடையே
-2-
அகற்றப்¢பட்டு விட்டால் நாட்டில் அதர்மங்கள் பெருக வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்தவராக குமரகுருபரர் விளங்குகிறார்.
இதனால்தான் குமரகுருபரர், இளமைப் பருவம் நீர்க்குமிழி; மனிதனால் சேர்க்கப்¢படும் செல்வம் நீரில் எழுகின்ற அலை; மனித உடல் நீரில் எழுதப்¢படுகின்ற எழுத்து என்று தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் தனி மனித குணங்கள் மேம்படும். தனி மனித குணங்கள் மேம்பட்டால் அவன் சார்ந்த சமுதாயம் சிறப்¢படையும்.
கல்வி
தனி மனித ஆளுமை வளர்ச்சியில் மிகவும் இன்றியமையாத பங்கெடுப்¢பது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த குமரகுருபரர் கல்வியின் சிறப்பு, பயன், கல்லாமையின் இழிவு, கல்வியைக் காசாக்குவோர் நிலை ஆகியன பற்றி 25 பாடல்களில் விரிவாகப் பேசுகிறார். இதனால்தான் கல்வியைச் ‘சிற்றுயிர்க்கு உற்ற துணை’ (நீ.நெ.வி. 2) என்றும், கற்புடைய மனைவி, செல்வப் புதல்வன் (நீ.நெ.வி. 4) என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறர்க்கு அஞ்சாது எடுத்துரைக்க வேண்டும். அதுபோல தம்மைவிட அறிவில் மிக்கார் கூடியுள்ள அவையில் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் அதனைப் பற்றிப் பேசுவதற்கு அஞ்ச வேண்டும். அதாவது அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுதலும் அஞ்சத்தகாதனவற்றிற்கு அஞ்சாதும் வாழ்தல் வேண்டும். இத்திறம் நல்ல மனிதர்களுக்குரிய ஆளுமைப் பண்பாகும். இதனையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் (குறள்.428)
என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
செருக்கின்மை
ஒருவர் அனைத்திலும் தாமே மேலானவர் என்று செருக்குக் கொள்ளுதல் அழிவிற்கு வித்தாகும். எனவே வாழப் பிறந்த மனிதர்கள் செருக்கற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
நம்மைவிட செல்வத்தில் குறைந்தாரை நோக்கி நாம் அவர்களை விட மிகுந்த செல்வம் உடையேம் என்று மன நிறைவு கொள்ள வேண்டும். அதேவேளையில் நம்மைவிட கல்வியில் மிக்காரைப் பார்த்து நாம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எண்ணுதல் வேண்டும். இதனை விடுத்துத் தாமே செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுதல் செருக்காகும். செருக்குடையவர்கள் வாழ்வு சருக்கி விடும் என்பது குமரகுருபரரின் துணிபாகும். இதனை,
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்எற்றே இவர்க்குநாம் என்று. தாமே (நீ.நெ.வி. 15)
-3-
முயற்சி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்; விதியை மதியால் வெல்லலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முதுமொழிகளாகும். இதனை வள்ளுவரும்,
ஊழையும் உப்¢பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (குறள்.620)
என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் ஒருவர் பெறும் உயர்வுகளுக்கு அவர்தம் முயற்சிகளே காரணமாகின்றன.
தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்த நினைக்கும் ஒருவர் தம்முடைய உடல் துன்பம், உள்ளப் பசி, தூக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று குமரகுருபரர் கருதுகிறார். இதனை,
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் .......................... ..................... ................... ........................ கருமமே கண்ணாயி னார் (நீ.நெ.வி.53)
என்று இவர் குறிப்பிடுகிறார்.
தெரிந்து முயலுதல்
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும்கூட ஒன்றைச் செய்ய முயல்வதற்கு முன்பு அச்செயலைச் செய்வதற்குரிய காலம், இடம், காரணம், பயன் ஆகியவற்றை ஆராய்ந்து ஈடுபடுதல் இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற இயலும். இதனை,
காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின் மூலமறிந்து விளைவறிந்து - மேலும்தாம்சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்துஆள்வினை ஆளப் படும். (நீ.நெ.வி.53)
என்று நீதிநெறி விளக்கம் தௌ¤வுறுத்துகிறது. எனவே, தெரிந்து முயலுகின்ற ஆளுமைத்திறன் பெற்றவரால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பது புலனாகிறது.
வஞ்சகம் புரியாமை
மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும் வஞ்சித்தும் வாழத்தலைப்¢படுகின்றனர். இது மிகவும் கொடிய செயலாகும். இங்ஙனம் வஞ்சித்தொழுகுவாரை மதியற்றவர்கள் என்று குமரகுருபரர் சாடுகிறார். பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்களுக்கு அப்பொழுது வேண்டுமானால் ஒருவரை வஞ்சித்து விட்டோம் என்ற உணர்வு மேலிடலாம். இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே ஆகும். ஒருவர் பிறரை ஏமாற்றுவதையும் வஞ்சிப்¢பதையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எனவே அதற்கான தண்டனைக் கிடைக்கப்பெற்றேத் தீரும் என்பதை,-4-
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்வஞ்சித்தோம் என்று மகழன்மின் - வஞ்சித்தஎங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சிஅங்கம் குலைவது அறிவு (நீ.நெ.வி.94)
என்னும் பாடலில் குமரகுருபரர் அறிவுறுத்துகிறார். ஆதலால் நல்ல மனிதர்களாக உலகை வலம் வர விரும்புகின்ற நல்லவர்கள் வஞ்சக எண்ணமில்லா ஆளுமைப்¢பண்பு நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சிற்றின்பம் நாடாமை
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது பழமொழி. இதன்பொருள் நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்களும் நல்லவர்காளாவர் என்பதாகும். பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது மற்றொரு பழமொழி. இதன்பொருள் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்களும் தீயவர்காளாகி விடுவர் என்பதாகும்.
உலகில் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்கள் கெடுவதைத்தாம் மிகுதியாகப் பார்க்கிறோம். நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்கள் திருந்துதல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் குமரகுருபரரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்பாடல் இதுதான்;
சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்மற்றினபம் யாவையும் கைவிடுவர் - முற்றுந்தாம்பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோபாரின்பப் பாழ்ங்கும்பி யில் (நீ.நெ.வி.88)
அதாவது பேரின்பத்தை விரும்புகின்றவர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பத்தை விரும்பினார் மற்றின்பத்தை எல்லாம் கைவிடுவர்.
எனவே சிற்றின்பத்தை விரும்பாது வாழ்தல் என்பது தனி மனித ஆளுமைத் திறனாகக் கொள்ளலாம். இதனைத்தான் வள்ளுவரும் சிற்றினஞ்சேராமை என்று வலியுறுத்துகிறார்.
நயத்தகு நாகரிகம்
ஒருவன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்தல் வேண்டும். ஆனால் சிலர் தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று வாய்ச்சவடால் பேசுவர். செய்தற்கு அரிதினும் அரிதான காரியங்களைத் தான் செய்து முடிப்பேன் என்று கூறிவிட்டு அதனைச் செயலில் காட்டாமல் பேச்சளவில் மட்டுமே நிற்பர். இத்தகையோரை நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகமாகச் சாடுகிறார் குமரகுருபரர். எனவே, மனிதர்கள் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழும் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.

-5-
பிறன்மனை நயவாமை
ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். பேராண்மை என்றால் பெரிய வீரம என்று பொருளாகும். பிறன் மனை நோக்காத் தன்மையே பேராண்மை என்பது வள்ளுவம். இதனை,
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)
என்னும் திருக்குறள் சுட்டுகிறது. இதனை நீதிநெறி விளக்கமும் வலியுறுத்துகிறது. பிறன்மனை விரும்பிச் செல்வான் உடலும் உள்ளமும் நடுக்கமுற்றுத் தீரா நோயுறுவான் என்று நீதிநெறி விளக்கம் (நீ.நெ.வி.77) எச்சரிக்கை செய்கிறது.
ஈகையும் இன்சொல்லும்
ஒருவர் தம்மிடமிருக்கும் பொருளை ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து வழங்குதல் வேண்டும். அங்ஙனம் வழங்குதல் மிகுந்த இன்பத்தைத் தரவல்லது. பிறருக்கு வேண்டுவனவற்றை வழங்காமல் தம்மிடம் உள்ள பொருட்செல்வத்தை இழப்¢பவர்கள் அதனால் ஏற்படும் இன்பத்தை அறியாதவர்களாவர். இதனை,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இதனைக் குமரகுருபரர், ஈயாக் குணம் கொண்ட செல்வந்தரின் செல்வத்தைக் காட்டிலும் ஈயும் குணம் கொண்டவரின் வறுமை மேலானது என்று ஈகையின் பெருமையை எடுத்துரைக்கிறார். இதனை,
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்நல்குரவே போலும் நனிநல்ல............ (நீ.நெ.வி.67)
எனனும் வரிகள் தௌ¤வுறுத்துகின்றன.
பிறருக்குப் பொருள் கொடுத்து உதவும்பொழுது இனிய சொற்களைக் கூறி அளித்திடல் வேண்டும். அதாவது முகமலர்ச்சியோடு வழங்குதல் வேண்டும். ஈகை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது இன்சொல் கூறுதலும் ஆகும். ஒருவேளை ஈகை செய்ய முடியாமல் போனால் இனிய சொற்களையாவது கூறுதல் வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில்,
ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்ஓஓ கொடிது கொடிதம்மா ...... (நீ.நெ.வி.68)
என்னும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. எனவே, ஈகையும், இன்சொல் கூறலும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
-6-
எனவே, குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் தனிமனித ஆளுமைப் பண்புகளை மிகுதியும் எடுத்துரைத்துள்ளமையைக் காண முடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தாக்கங்களைத் தொகுத்து நோக்குங்கால்அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்;
• மனம், மொழி, மெய்களால் தீமை செய்யாதிருக்க வேண்டும்• தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்• பயன் சிறிதாயினும் விடா தொடர் முயற்சி செய்தல் வேண்டும்• எண்ணித் துணிதல் வேண்டும்• கருமமே கண்ணாயிருக்க வேண்டும்• பிறரின் சிறிய குணங்களை இகழாது அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்• நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாதிருக்க வேண்டும்• தன்மானத்தை விற்றுப் பொருள் ஈட்டாதிருக்க வேண்டும்• ஒருவனுக்கு ஒருத்தி என்று உண்மையாய் வாழ வேண்டும்
இவற்றைப் பின்பற்றி மானிட சமுதாயம் வாழத் தலைப்¢படுகின்ற பொழுது வீடும் நாடும் ஒருசேர உயரும் என்பது திண்ணம்.






















ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

குடந்தைக் கல்லூரி

முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan மதியம் வெள்ளி, பிப்ரவரி 20, 2009 தமிழ்மணம் பரிந்துரை : 0/0

Pathivu Toolbar ©2009thamizmanam.com
குடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...

குடந்தை(கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில்(பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும்.பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார்.ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.


தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி,இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்.பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு?. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர்.நானும் துரை மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி,இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி,ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.


நான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச்செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு,அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர்.இவ்வாறு தமிழில் தட்டச்சுச்செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.


மாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன்(கொரியா)யுவராசு(சென்னை) குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன்(சென்னை) முகுந்து(பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர்.அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர்.மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர்.இப்பொழுது தமிழ்99 விசைப்பலகை அறிமுகம் ஆனது.99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செய்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன்.அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன்.முகுந்து அவர்களின் பங்களிப்பு,கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.


அடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.
தமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு,செப்பேடு,பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினேன்.

திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம்.அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன்,சுபா முயற்சி பற்றி விளக்கினேன்.அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன்.அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது.இணையப் பல்கலைக்கழகத்தின் தளம்,காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.


புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன்.மின் இதழ்கள்,பொங்குதமிழ் எழுத்துருமாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.


விக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன்.என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.


வலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன்.நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார்,சௌந்தர்,தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிசப் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி,தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி,குடந்தை மகளிர் கல்லூரி,ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.


பேராசிரியர்கள் சி.மனோகரன்,முனைவர் சிற்றரசு,முனைவர் குணசேகரன்,முனைவர் துரையரசன்,முனைவர் சிவநேசன்,முனைவர் காளிமுத்து முனைவர் துரை.மணிகண்டன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன்.என் மாணவர்(கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.

அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று கண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன்.இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம் லேபிள்கள்: குடந்தைக் கல்லூரி, மின் நூல்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2009

ஒளவையாரின் சிந்தனைகள்

5. ஒளவையாரின் சிந்தனைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே தொடர்ந்து போற்றப்பெறும் புலவர் பெருமாட்டியருள் ஒளவையாரின் அருமைத் திருப்பெயரை அறியாதோர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர்.

ஒளவையார் என்றதும் சுட்டப்¢ பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற ஒளவைக்கும் முருகப் பெருமானுக்கும் நடந்த உரையாடலே அனைவருக்கும் நினைவுக்கு வரும். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை அதியமான் இவரிடம் அன்புடன் கொடுக்க அதனை ஒளவை உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார் என்ற வரலாற்றுச் செய்தி தமிழில் இலக்கிய வரலாறு அறிந்தோருக்கு நன்கு நினைவுக்கு வரும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் என்றால், தமிழ்ப் பாட்டி இந்த ஒளவையார்தான். இப்பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்று அறியப்¢பட்டுள்ளது.

ஒளவையார் என்ற பெயர் தமிழில் தாய்க்கும், தெலுங்கில் பாட்டிக்கும், கன்னடத்தில் மூதாட்டியாகிய கிழவிக்கும் வழங்கப்¢படுவதாக கன்னட மொழி அகராதிக்காரரான கிட்டல் என்பவர் குறிப்பிடுகிறார். அம்மை என்ற சொல்லின் திரிபு அவ்வை என்றும் அச்சொல்லுடன் ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்ந்து அவ்வையார் (ஒளவையார்) என்ற சொல் தோன்றியது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இன்றைய சான்றோர் சிந்தனைப் பகுதியில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்¢படுகிற ஒளவையாரின் சிந்தனைத் துளிகளைக் காண்போம்;

அறிவால் - குணத்தால்- செய்கைகளால் - மேம்பட்டவர்களை மக்களில் மேலோர் என்ற பொருண்மையில் மேன்மக்கள் என்று அழைப்¢பர். இவர்கள் தங்களின் நல்ல பண்புகளிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தங்களுக்குக் கேடு வந்துற்றபொழுதும் கூட தங்களின் மேலான குணாதிசயங்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்று ஒளவையார் தௌ¤வுபடக் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறுகின்ற உவமைகள் மிக அழகானவை - எளிமையானவை - பாமரருக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை.

பால் சுவை மிகுந்தது. அதனைக் காய்ச்சினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்; சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அதன் சுவையே தனிதான். சங்கு நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனைச் சுட சுட அதன் நிறம் மேலும் மேலும் மெருகேறும் - வெள்ளை நிறம் பளிச்சிடும்.

இவை பாமரரும் அறிந்த உண்மையாகும். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைப் பொருள்களைக் கூறி - இவை போல மேன்மக்கள் தங்களின் செல்வம் உள்ளிட்ட தகுதி நிலைகளிலிருந்து தளர்ந்து போய்விட்டாலும் - அதாவது கெட்டுப் போய்விட்டாலும் தங்களின் மேலான குண நலன்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்பதை ஒளவையார் தமக்கே உரிய பாணியில் பாடல் புனைந்துள்ளார். இக்கருத்தை வெளிப்¢படுத்தும் பாடல் இதுதான்;

அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளவாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்தல் வேண்டும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்களிடத்திலே கூட இந்த நல்ல பண்பு இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மக்களிடத்து மட்டும் இது குறைவாகவே காணப்¢படுவது வருத்தத்திற்குரியது ஆகும்.
ஒருவருக்குச் செய்கின்ற உதவி அவரிடமிருந்து பிறிதொரு பயனை எதிர்பார்த்ததாக இருத்தல் கூடாது. உதவி உதவி வரைத்தன்று என்பது வள்ளுவம். அங்ஙனம் ஒருவர் செய்த உதவியை மறந்து விடவும் கூடாது. ஏனெனில் நன்றி மறப்¢பது நன்றன்று.

உதவி என்பது யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படுகின்ற பொழுது செய்யலாம். நல்லவர்கள் அதனை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். காலம் காலமாக உதவி செய்தவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்கள் அல்லாதவர்கள் பிறர் செய்த உதவியை விரைவில் மறந்து விடுவர்.

செய்த உதவி ஒன்றுதான். ஆனால் செய்யப்¢பட்டவர்களின் தன்மைக்கேற்ப நினைக்கப்¢படுகிறது அல்லது மறக்கப்¢படுகிறது. இந்த இரண்டும் உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள்தாம். இதனை உள்வாங்கிக்
கொண்ட ஒளவையார் அதனைத் தம் பாடலில் மிகத் தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். அப்¢பாடல் வரிகள் இதுதான்;

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே - அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர்மேல் எழுத்துக்கு நேர்
கல்மேல் எழுதுகிற வழக்கம் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே நிலைபெற்றிருக்கிற ஒன்றாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு கல்வெட்டுக்களாக வடித்துள்ளனர் - செப்புப் பட்டயங்களாகத் தந்துள்ளனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான போதிலும் இன்றும் பல கல்வெட்டுச் செய்திகள் அழியாமல் பல உண்மைகளை நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன. மேலும் மேலும் பல கல்வெட்டுக்கள் புதிதாக கண்டுபிடிக்கப்¢பட்டு வருகின்றன. இன்னும் பல கண்டுபிடிக்கப் படாமலேயே புதைநிலையில் அமிழ்ந்துள்ளன. எனவே கல்வெட்டுச் செய்திகள் சாகா வரம் பெற்றவையாகும்.

இக்கருத்தை ஒளவையார் மிக அழகாகக் கையாண்டுள்ளார். நல்ல மனிதர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் நிலைத்து நிற்கும். பிறர் செய்த உதவியை நல்லவர்கள் என்றுமே மறப்¢பது இல்லை. இதனால்தான் ‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.

ஆனால் தீயவர்களுக்குச் செய்த உதவி இதற்கு நேர் மாறானது. அவர்கள் பிறர் செய்த உதவியை உடனேயே மறந்து போய்விடுவர். எனவே இவர்களுக்குச் செய்த உதவி என்பது நீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றதாகும். நீர் மேல் எழுத முடியாது என்பதும் அப்¢படியே எழுதினாலும் நிலைத்து நிற்காது என்பதும் உலகம் அறிந்த உண்மை.

கல்லெழுத்து, நீர் மேல் எழுத்து என்ற இரண்டு உலக உண்மைகளைப் பயன்படுத்தி - மக்களுக்கு எடுத்துக்கூறி நல்லவர்களுக்கும் அல்லவர்களுக்கும் செய்கின்ற உதவி எப்¢படி இருக்கும் என்பதை ஒளவையார் மிக நேர்த்தியாக விளக்கி உள்ளார். இங்ஙனம் ஒளவையாரின் பாடல்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் படிப்¢பவர்களுக்கு இனிமையாகவும் அவர்கள் உள்ளத்தில் கருத்துக்கள் பசு மரத்தாணி போல பதிகின்ற விதத்திலும் அமைந்துள்ளமையை ஒவ்வொருவரும் காணலாம். அவர்கள் உதிர்த்த முத்துப் போன்ற கருத்துக்களில் சில;

சோழ நாட்டின் பெருமையையும் வளத்தையும் ஒருசேர எடுத்துரைக்கும் - சோழ வள நாடு சோறுடைத்து.
நாடு வாழ்ந்தால் நாமும் வாழலாம் என்ற உண்மையை வெளிப்¢படுத்தும் - நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை.

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லுதல் மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்பதை வலியுறுத்தும் - மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும்.

அகங்காரம் கூடாது - அடக்கமே வேண்டும் என்பதைச் சுட்டும் வகையில் - கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

இவை போன்ற ஒளவையாரின் அமுத மொழிகள் மானுட நெறி சிறக்கவும் - சான்றோர் நிறைந்த நாடாக நம் நாடு செழிக்கவும் - வையத்தை வாழ்வாங்கு வாழ்விப்¢பதற்கும் பேருதவியாய் இருக்கும் என்று நம்பலாம்.

கபிலரின் சிந்தனைகள்

4. கபிலரின் சிந்தனைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருவேறு கபிலர் குறிப்பிடப்¢பட்டுள்ளனர். ஒருவர் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க்காலத்துக் கபிலர்; மற்றொருவர் இன்னாநாற்பது என்ற நூலை எழுதியவர். இவர்கள் இருவரும் ஒருவரே என்று கூறுவாறும் உள்ளனர்.

கபிலர் நட்புக்கு இலக்கணமானவர். பாரி-கபிலர் நட்பு போற்றுதலுக்கு உரியது. பாரி இறந்த பிறகு அவரது மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோருக்குத் திருமணம் செய்து வைப்¢பதற்கு அரும்பாடுபட்டவர். குறுநில மன்னர்களான விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகியோரிடம் இம்மகளிரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினர்.

இவரது தமிழ்ப் புலமையும் பாராட்டுதலுக்கு உரியது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காக குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். மலையின் இயற்கை வருணனையை நயம்படச் சித்தரித்துக் காட்டியமையால் இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டப் படுகிறார். இவர் இந்நூலின் 34 அடிகளில் 99 மலர்கள் வரிசைபட யாத்துள்ளத் திறம் பாராட்டத்தக்கதாகும்.
இவர் எழுதியுள்ள இன்னா நாற்பது என்ற நூல் இன்னாத அதாவது துன்பம் தரும் பொருள்களை எல்லாம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்¢பட்டுள்ளன. வாழ்க்கையில் இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக் கூறும் 40 பாடல்கள் உள்ளமையால் இன்னாநாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலில் மனித வாழ்விற்குத் துன்பம் தரத்தக்க 160 பொருள்கள் நயம்படச் சுட்டப்¢பட்டுள்ளன. ஒரு பாடலில் கூறப்¢பட்டுள்ள நான்கு இன்னாத பொருள்களைக் கேளுங்கள்;

பெரியவர்களோடு சேர்ந்து பழகுதல் வேண்டும். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு - அவர்களின் சொற்படி நடத்தல் வேண்டும். எந்த செயலையும் பெரியவர்களை ஆலோசிக்காமல் செய்யக் கூடாது. அவ்வாறு ஆலோசிக்காமல் செய்த செயல்கள் பெரிதும் வெற்றி பெறுவதில்லை. இதை வலியுறுத்தும் வகையில், சிறு பிள்ளை விட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழியே வழக்கில் உலவி வருகிறது. பெரியவர்களின் துணை கொண்டு வாழ வேண்டும் எனபதை வலியுறத்த எண்ணிய வள்ளுவரும் பெரியாரைத் துணைக்கோடல் என்றும் பெரியாரைப் பிழையாமை என்றும் இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார்.

பெரியவர்கள் என்பவர்கள் நம்மை விட வயதால் மூத்தவராக இருக்கலாம்; கல்வியால் உயர்ந்தவராக இருக்கலாம்; பண்பால் உயர்ந்தவராக இருக்கலாம்; ஒழுக்கத்தால் உயர்ந்தவராக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் - ஏதேனும் ஒரு காரணத்தால் உயர்ந்தவர்களாக இருக்கலாம். பெரியவர்களைத் துணை கொள்ளல் வேண்டும் என்பதை,
பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னாஅரியவை செய்தும் எனவுரைத்தல் இன்னாபரியார்க்குத் தாம்உற்ற கூற்றின்னா இன்னாபெரியார்க்குத் தீய செயல்
என்ற பாடல் தௌ¤வுறுத்துகிறது. அதாவது, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர்களோடு கொண்ட நட்பினைக் கைவிடுதல் துன்பம் தரும்; செய்வதற்கு அறிய காரியங்களைச் செய்து முடிப்பேன் என்று வெற்று ஆரவாரம் செய்தல் பெரிய துன்பத்தை விளைவிக்கும்; நம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்களிடம் நாம் அடைந்த துன்பங்களை எடுத்துரைத்தல் தன்பத்தைத் தருமேயன்றி இன்பத்தைத் தராது; பெருமையுடன் மதிக்கத்தக்கச் சான்றோர்களுக்குத் தீங்கு செய்வதால் பெருந் துன்பங்களே நேரிடும்.
அற மனத்தார், மற மனத்தார் என்ற இரண்டு அருமையான பொருள் பொதிந்த சொற்களைக் கபிலர் பயன்படுத்தி உள்ளார். அற மனத்தார் என்பவர்கள் அறச் செயல்களைச் செய்பவர்கள். மற மனத்தார் என்பவர்கள் மறச் செயல்களை-வீரச்செயல்களைச் செய்பவர்கள்.

அறமனத்தார் கூறும் கடுமொழியும் இன்னாமறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னாஇடும்பை உடையார் கொடை இன்னாகொடும்பாடு உடையார்வாய்ச் சொல்.

அறத்தை விரும்பும் நெஞ்சத்தை உடைய சான்றோர்களான அறமனத்தார் சொல்லுகின்ற கடுஞ் சொற்கள் துன்பத்தைத் தரவல்லன. அதுபோல வீரத்தன்மை மிக்க நெஞ்சத்தினரான மறமனத்தார் போர்க்களத்தில் சோம்பி இருத்தல் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த நாட்டிற்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். வறுமை உடையவர்கள்

வள்ளல்கள் போல் நடந்து கொள்வது துன்பத்தைத் தரும். நடுவுநிலை தவறி - நியாயம் தவறி பேசுபவர்களின் சொற்களும் மிகுந்த துன்பத்தைத் தரவல்லன.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்று வள்ளுவர் பொருட்தேவையைத் திறம்படக் கூறியுள்ளார்.

கிராமத்தில் வாழ்வோர் குறைவான பண வசதி இருந்தாலும்கூட சிறப்பாக வாழ முடிகிறது; ஆனால் நகரத்தில் வாழ்வோர் வாழ்க்கை அப்¢படி இல்லை. மிகுந்த பணம் தேவைப்படுகிறது. இதனைக் கபிலர் நன்கு உணர்ந்தவராகத் தெரிகிறார். அவர் கூற்றைப் பார்க்கும்பொழுது ஒரு வேளை அவர் நகரத்தில் வாழ்ந்தவராக இருப்பாரோ என்று ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது; அல்லது நகரத்தில் வாழ்ந்தவர்களை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். அப்பாடல் இதுதான்;

பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னாநெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னாவருமனை பார்த்திருந்து ஊணின்னா இன்னாகெடும்இடம் கைவிடுவார் நட்பு.
செல்வம் இல்லாதவன் பிறர்க்கு உதவி புரிய வேண்டும் என நினைத்துச் செயல்படுதல் அவனுக்கும் அவனைச் சார்ந்து வாழும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். நெடிய மாடங்களை உடைய பெரிய நகரத்திலே பொருளின்றி - அதாவது தேவையான பொருளின்றி வாழ்தல் மிகுந்த துன்பத்தைத தரும். தம்மை அழையாதவர் வீட்டுக்குச் சென்று அவர் விரும்பும் வரை காத்திருந்து அவர் இடுகின்ற உணைவை உண்டு வருதல் பெருந்துன்பம் ஆகும். இது அழையாதார் வீட்டு விருந்தாளி போல இழிந்த நிலையை ஏற்படுத்தும். வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குவாரின் நட்பு மிகுந்த துன்பத்தைத் தரும். நண்பர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ளத்தக்கவர்களாக இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாமல் நாம் வளமுடன் இருக்கும் காலத்தில் நம்முடன் நலம் துய்த்துவிட்டு வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குதல் என்பது சிறந்த நட்பாகாது. இதைத்தான் வள்ளுவரும்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று கூறியுள்ளார். எனவே, கபிலர் கூறியுள்ள இன்னாதவற்றை நீக்கி இனிமையுடன் வாழ அனைவரும் முயல வேண்டும்.

குமரகுருபரரின் சிந்தனைகள்

3. குமரகுருபரரின் சிந்தனைகள்

சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடலுக்கு ஏற்பத் தமிழ்க் கவிஞராகவும், தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர் குமரகுருபரர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் குமரகுருபரருக்கு என்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர், பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.


திருவைகுண்டத்தில் பிறந்த இவர் ஐந்து வயது வரை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுகின்ற திறம் பெற்றார். கந்தர் கலி வெண்பா முதலாக 16 இலக்கியங்களைப் படைத்தருளினார். இவர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்டு மதுரை மீனாட்சியம்மையே நேரில் எழுந்தருளி வந்து அவருக்குத் தம் கழுத்தில் கிடந்த முத்து மாலையை அணிவித்து மகிழ்ந்தாள் என்று கூறுவர்.


இவர் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலின் துணை கொண்டு இவர்தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நோக்குவோம். நூலின் காப்புச் செய்யுளே மனித வாழ்க்கையைப் பற்றி மிக்க நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. அப்பாடல் இதுதான்;


நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று.

மனிதனின் இளமைப்¢பருவம், மனித உடல், அவனால் முயன்று சேர்க்கப்¢படும் செல்வம் ஆகியவற்றைப் பற்றிய குமரகுருபரரின் சிந்தனைகளை மனிதர்கள் ஒவ்வொருவரும் மனத்துள் இறுத்தினால் மனித வாழ்வில் பொய் இல்லை - புரட்டு இல்லை - மனிதனை மனிதன் ஏய்க்கும் அவலம் இல்லை.

நீர்க் குமிழிகள் ( Bubbles) தோன்றுவதும் தெரியாது - மறைவதும் தெரியாது - தோன்றிய மாத்திரத்திலேயே மறைந்துபோகும். இந்த நீர்க்குமிழி போன்றதுதான் மனிதனின் இளமைப் பருவம். இது தெரியாமல் மனிதர்கள் இந்த இளமைப்¢ பருவத்திலே என்னென்ன செயல்களிலே ஈடுபடுகின்றார்கள்?
தண்ணீரில் எழுத முடியுமா? முடியும் என்கிறார் குமரகுருபரர். ஆனால் அந்த எழுத்து நிலைத்து நிற்காது - எவருடைய கண்ணுக்கும் தெரியாது. நீரில் எழுத எழுத அழிந்து கொண்டே போகும். அது போன்றதுதான் மனித உடம்பு. நீர்க் குமிழி கூட கண்ணால் பார்க்க முடியும். சற்று நேரம் நிலைத்து நிற்கும். ஆனால், நீர் மேல் எழுதப்¢படும் எழுத்து அதனினும் வேகமாக அழிந்து போகக் கூடியது.

அரும்பாடுபட்டு மனிதர்கள் சேர்க்கும் செல்வத்தின் கதியோ அதோகதிதான். நீரில் தோன்றுகின்ற அலை போன்றதாம் மனிதர்கள் சேர்க்கும் செல்வம். நீரின் நடுவே தோன்றுகின்ற அலை கரையை அடைவதற்குள் காணாமல் சிதைந்து போய்விடும். அதுபோல மனிதன் பாடுபட்டுத் தேடிய செல்வம் அவனுக்குப் பயன்படுவதற்கு முன்பே காணாமல் போய்விடும் அல்லது அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பே இவன் இல்லாமல் போய்விடுவான். இருப்¢பது போல இல்லாமல் போகும் அலைபோலவே செல்வமும் இருப்¢பது போல இல்லாமல் போய்விடும்.

எனவே, மனிதன் மிகவும் நம்பிக்கொண்டிருக்கின்ற தன் உடல், இளமை, செல்வம் ஆகியவை விரைந்து அழிந்து போகக் கூடியவை. அதனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து நிற்க வேண்டாம் என்பது குமரகுருபரரின் கருத்தாக உள்ளது.

அடுத்து கல்வி பற்றிய அடிகளாரின் கருத்தினை நோக்குவோம்;
கல்வி இம்மைப் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தர வல்லது. கல்வியைப் போன்று மக்களுக்குத் துயர் மிக்க நேரத்தில் துணையாகும் பொருள் வேறு எதுவும் இல்லை. இதனை,
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்றுஉற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைசிற்றுயிர்க்கு உற்ற துணை என்ற பாடல் மூலம் உணர்த்துகிறார் அடிகளார்.

ஒரு மனிதன் காமத்தை விரும்புகிற அளவிற்குக் கல்வியை விரும்புகிறானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காமத்தைக் காட்டிலும் கல்வியே உயர்ந்தது எனபதை வலியுறத்த முனைகிறார் குமரகுருபரர். கல்வியானது தொடக்கத்தில் துன்பமாய் இருக்கும்; பின்னர் இன்பம் தரும். ஆனால் காமம் தொடக்கத்தில் இன்பமாய்; பின்னர் துன்பம் தரும். எனவே கலவி¢யைப் பற்றி வாழ வேண்டுமே ஒழிய மனிதர்கள் காம நெறியைப் பற்றி வாழ்தல் கூடாது என்று வலியுறுத்துவதற்காக பின்வரும்¢ பாடலைப் புனைந்துள்ளார்.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்மடங்கொன்று அறிவகற்றும் கல்வி - நெடுங்காமம்முற்பயக்குச் சின்னீர இன்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது.

கல்வியின் பயன் யாது எனில் அறிவு பெறுவதுதான். தான் அறிந்தவற்றைப் பிறர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இல்லையாயின் கற்ற கல்வியினால் யாதொரு பயனும் இல்லை என்று வள்ளுவத்தின் கருத்தை அடிகளார் வழிமொழிந்து கூறுகிறார்.
அவையின்கண் எடுத்துரைக்க அஞ்சுவார் பெற்ற கல்வியானது கல்லார் முன் பேசும் ஆரவாரச் சொல்லைப் போலவும், பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்ணாதார் செல்வம் போலவும், வறுமையில் வாடுபவர் பெற்ற அழகு போலவும் பயனற்றது என்பதை,

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்பூத்தலின் பூவாமை நன்று

என்ற பாடல்வழி வலியுறுத்துகிறார். இதனை,
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லார் அவையஞ்சு வார்
என்று வள்ளுவரும் கூறியிருப்¢பதைக் காணலாம்.

கற்றவற்றை நினைவில் வைத்திருத்தலும் மிக முக்கியமானது என்று அடிகளார் கருதுகிறார். அவ்வாறு கற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிது புதிதாக கற்க நினைப்¢பது பாடுபட்டுத் தேடிய செல்வத்தைத் தொலைத்து விட்டு, மீண்டும் கடினப்¢பட்டு உழைத்துச் செல்வத்தை ஈட்டுதற்கு ஒப்பாகும்.

எனவே, கல்வியே பிற அனைத்தையும் விட சிறந்தது என்பதையும் அதனைக் கற்றவாறு நினைவில் வைத்து அதற்கேற்ப ஒழுகுதல் வேண்டும் என்பதும் குமரகுருபரரின் கருத்தோவியமாக இருப்¢பதை அறிய முடிகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

2.அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். இவர் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மரபினர். இவருடைய தந்தையார் நெல்வேலி பாண்டியன். இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து ஆட்சி செய்தார். மேலும் கொற்கை நகரை ஆட்சி செய்தமையால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்¢பட்டார். வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, அழகன் சேவகவேள், தமிழ் வளர்த்த தென்னவன் என்ற சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
இவர், நைடதம் என்ற காப்பிய நூலையும், நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்ற நீதி நூலையும், திருக்கருவைப் பதிற்றுப்¢பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா, திருக்கருவை கலித்துறை என்ற அந்தாதி நூல்களையும், கூர்ம புராணம், இலிங்க புராணம், மகாபுராணம் என்ற புராண நூல்களையும், காசி காண்டம், வாயு சங்கீதை என்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றின் வழியாக இவரது புலமைத் திறத்தை நன்கு அறியலாம்.


இவர் எழுதிய காப்பிய நூலான நைடதம் பற்றிக் கூறுவோர் நைடதம் புலவர்க்கு ஒளடதம் என்று வியந்து கூறுவர். ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். நோயுற்றவருக்கு நோய் தீர்க்க மருந்து உதவுகிறது. அம்மருந்தைக் கொடுப்¢பவர் மருத்துவர். அதுபோல அறிவால் நோயுற்ற புலவர்களுக்கு நைடதம் என்ற மருந்தைக் கொடுத்து நோய்ப் போக்கியவர் அதிவீரராம பாண்டியர். கற்றாருள் நன்கு கற்றவர் நனிகற்றவர்; மருத்துவருக்கே மருந்து கொடுக்கும் மருத்துவர் சிறந்த மருத்துவர். அதுபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். தமிழைத் தொடக்கத்தில் பயில்வோர் இந்நூலைத் தவறாது படிப்¢பர் என்பதிலிருந்து இவரது புலமைத்திறம் நன்கு வெளிப்¢படும்.
இலக்கியப் பயிற்சிப் பெற விரும்புவோருக்குச் சிறந்த நூலாக நைடதத்தைக் குறிப்பிடுவர். புலமை சான்றவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நூலைப் படிப்¢பர். இந்நூலை எழுதி முடித்த உடன் அதனைத் தனது அண்ணியாரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னாராம். அதன் பிறகு நூலின் தன்மை குறித்துக் கேட்டாராம்.


மிகுந்த இலக்கிய வாசிப்பும் அறிவுத்திறமும் பெற்ற அண்ணியார் இந்நூலின் நடை வேட்டை நாயின் ஓட்டம் போல இருக்கிறது என்று கூறி பாராட்டினாராம். அருமையான உவமை நயத்துடன் அமைந்துள்ள இவரின் கருத்து இந்நூலின் நடைப்போக்கை நன்கு வெளிப்¢படுத்துவதாக அமைந்துள்ளது.


அதாவது, வேட்டை நாயானது வேட்டைக் கிடைக்கும் வரை மிக வேகமாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் ஓடிக்கொண்டே இருக்கும். வேட்டைக் கிடைத்த உடன் அதன் வேகம் குறைந்து விடும். அதுபோல் இந்த நூல் கதையின் உச்சநிலையை (CLIMAX) அடையும் வரை மிக வேகமாகவும் விருவிருப்பாகவும் செல்கிறது. படிப்¢பவர் கவனம் சிதையாது விரைந்து ஆவலோடு படிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்குப் பிந்தைய பகுதியானது வேட்டைக் கிடைத்தவுடன் வேட்டை நாயின் வேகம் குறைந்து போனதைப் போல விருவிருப்புக் குறைந்து போயுள்ளதாக இந்நூலைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ளார். இதன்மூலம் அதிவீரராம பாண்டியர் திறம்பட நூல் யாப்¢பவர் என்பது தௌ¤வாகிறது.


இவர் எழுதிய நீதி நூலான கொன்றைவேந்தன் ஓர் அரிய நூலாகும். இதனுள் சிறந்த நீதிக்கருத்துகள் அமைந்துள்ளன. இந்நூல் ஆழமும் அகலமும் எளிமையும் உடையது ஆகும். இந்நூலைப் படிப்போர் குற்றங்களை எளிதில் நீக்கி சிறப்புடன் வாழ்வர். இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இவை அமைப்பு முறையில் ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் போன்றவை. இந்நூற் பாடல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தி முறையில் நன்கு அமைந்துள்ளது.


இந்நூற்கண் உள்ள சில பாடல்களின் கருத்தினைக் கேளுங்கள்; யார் யாருக்கு எது அழகு என்று கூறுகிறார்.


• கல்விக்கு அழகு கசடற மொழிதல் - கற்ற கல்வியைப் பிழையில்லாமல் எடுத்துரைப்¢பதே கல்விக்கு அழகாம்.• செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல் - செல்வம் படைத்தோர் - வசதி படைத்தோர் என்போர் உற்றார் உறவினரையும் அக்கம் பக்கத்தாரையும் அரவணைத்து வாழ வேண்டும். அதுவே அவர்களுக்கு அழகாம். • மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - சிறந்த ஆட்சியாளர்கள் என்போர் முறை தவறாது மக்கள் நலம் கருதி அவர்களுக்கு வேண்டுவனவற்றை மக்கள் கேட்காமலேயே செய்து தருவதாகும்.


உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல் - உழவர்கள் தங்கள் நிலங்களில் நன்கு பயிர் செய்து அப்பொருள் மூலம் உண்டு வாழ்தல் அழகாம்.• உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தோடு உண்பதுதான் உணவுக்கு அழகாம்.

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - பல நூல்களையும் கற்றவர்கள் அடக்கமுடன் இருத்தல் அவர்களுக்கு அழகாம்.• வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமை உற்ற காலத்திலும் வறியவர்கள் சிறந்த நெறியினின்று வழுவாது வாழ்தல் அவர்களுக்கு அழகாம்.
இங்ஙனம் பல தரப்¢பட்ட மனிதர்களும் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதை ஒரு வரியிலேயே தௌ¤வுபட எடுத்துக் கூறுகிறார் அதிவீரராம பாண்டியர்.


இதுபோலவே ஒற்றை வரியில் அழுத்தமான வாழ்வியல் சிந்தனைகளை அதிவீரராம பாண்டியர் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றுள் சில;


• பெரியோரெல்லாம் பெரியோரும் அல்லர்.

• உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

• கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

• அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

• சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

• அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

• புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

இங்ஙனம் அதிவீரராம பாண்டியர் தம் சிந்தனைகள் எளிய முறையில் அமைந்து தௌ¤ந்த கருத்தை வெளிப்¢படுத்தும் வகையில் உள்ளன.

திருவள்ளுவரின் சிந்தனைகள்

1. திருவள்ளுவரின் சிந்தனைகள்


ஒழுக்கம் பற்றி கூறாத அறநூல்களே உலகில் இல்லை. ஆன்மீகத்தின் இருப்பிடமான இந்தியத் திருநாட்டில் தோன்றிய வேதங்கள், ஞானநூல்கள், ஐம்பெருங் காப்பியங்கள், இராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், சீறாப்புராணம் போன்ற மாபெரும் இலக்கியங்கள் அனைத்துமே மனித இனத்திற்குத் தேவையான பல்வேறு நல்லொழுக்க நெறிகளை வலியுறுத்துவதை அடிப்¢படை நோக்கமாகக் கொண்டு எழுந்துள்ளமையைக் காண முடிகிறது. இந்த ஒழுக்க நெறிதான் விலங்கு வாழ்க்கையினின்று மனித வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டுகிறது.


ஒழுக்கம் பற்றிய வரையறை நாட்டுக்கு நாடு - இனத்துக்கு இனம் - காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் நம்பிக்கை, மரபு, சூழல் இவற்றிற்கு ஏற்பவும் ஒழுக்கம் பற்றிய விளக்கம் மாறுபட்டுப் போகிறது.


இச்சொல் ‘ஒழுகு’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தல் ஆகும். இன்னும் தௌ¤வாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவயான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைபிடிப்¢பதாகும்.
ஒழுக்கம் என்பதற்கு நடை, சீலம், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்¢பட்ட நல்ல பண்புகள், கடமை தவறாது நடத்தல், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றெல்லாம் பொருள் கூறலாம்.


ஒழுக்கத்தின் அங்கங்களாக அன்பு, அருள், கருணை, இரக்கம், பாசம், தியாகம், தொண்டு, பண்பு, பொறை, பணிவு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர்.


• ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்¢பது அல்ல; கெட்ட செய்கையை செய்யாமல் இருப்¢பதுதான் என்பார் அறிஞர் பெர்னாட்சா.

• யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலையாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று மனித ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறுகிறார் திருமூலர்.

அதாவது நம் பங்கில் ஒரு பிடியையாவது நம் எதிரில் பசியோடு இருப்¢பவனுக்குத் தருதல் வேண்டும்; அது முடியாது போகுமிடத்து மனதார ஒரு வாழ்த்தையாவது- இன்சொல்லையாவது கூறுதல் மனித குலத்திற்கு இன்றியமையாத ஒழுக்கமாகும். • இராமலிங்க வள்ளலார் ஒழுக்கங்களை நான்கு வகைப்¢படுத்திக் காட்டுகிறார். அவை;


1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம்

 இந்திரிய ஒழுக்கம்; உடலால் தூய்மையாக இருத்தல் தீயதைக் கேளாமல் இருத்தல் பிறர் மனம் புண்படப் பேசாமல் இருத்தல் பிறரைக் குரூரமாக பாராமல் இருத்தல் இனிய சொற்களைக் கூறல் இரக்கம் காட்டல் கருணை உள்ளம் உடையவராக இருத்தல் சத்தியம் நிறைந்திருத்தல்


 கரண ஒழுக்கம்; அன்பு, அருள், உயிர், இரக்கம் ஆகியவற்றை மனத்தில் இறுத்தி வாழ்தல். காமக்குரோதம், லோபம், மோகம், மத மாச்சர்யம் ஆகியவற்றை மனத்தில் இருந்து விலக்கி மனத்தை என்றும் தூய்மையாக வைத்திருத்தல்.
பிறர் குற்றம் காணாதிருத்தல்

 ஜீவ ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் தன் உயிராக எண்ணி வாழ்தல். அவ்வுயிர்களுக்கு ஏற்பட்டத் துன்பத்தைத் தனக்கு ஏற்பட்டதாகக் கருதி அதனைப் போக்கிட முனைதல்.
ஜீவகாருண்யம் என்று சொல்லப்¢படுகின்ற உயிரிரக்கத்தோடு எப்பொழுதும் வாழ்தல் - அதனைக் கடைபிடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்தல்.


 ஆன்ம ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயிலாகக் கருதி அவ்வுயிர்களின் உள் ஒளியை வழிபடுதல்.
இந்த ஒழுக்கம் பற்றிய செய்தித் திருக்குறள் முழுவதும் பரக்கக் காணப்படுகிறது.

அடக்கமுடைமை, அருளுடைமை, அவா அறுத்தல், அவை அறிதல், அழுக்காறாமை, அறன் வலியுறுத்தல், அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடன் அறிதல், காலம் அறிதல், இல்வாழ்க்கை, இறைமாட்சி, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஊக்கம்உடைமை, ஒப்புரவறிதல், கண்ணோட்டம், கயமை, கல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, கல்வி, குடிசெயல் வகை, குடிமை, குறிப்¢பறிதல், குற்றங்கடிதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கேள்வி, கொடுங்கோன்மை, கொல்லாமை, சான்றாண்மை, சிற்றினம் சேராமை, சுற்றந்தழால், செய்ந்நன்றி அறிதல், தெரிந்து செயல் வகை, தெரிந்து தௌ¤தல், தெரிந்து வினையாடல், நடுவுநிலைமை, நாணுடைமை, பண்புடைமை, பயனில சொல்லாமை, பிறனில் விழையாமை, புலால் மறுத்தல், புறங்கூறாமை, பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை, பொறையுடைமை, மடியின்மை, வாய்மை, விருந்தோம்பல், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைத் திருவள்ளுவர் எடுத்துக்கூறுகிறார்.


இக்கருத்துக்களின் முத்தாய்ப்பாக ஒழுக்கமுடைமை என்றஅதிகாரத்தில்,
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. மனிதர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தம் உயிரை இழப்¢பதற்கு ஒப்¢ப மாட்டார்கள். அந்த விலை மதிக்க முடியாத உயிரைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது என்பதை
ஒழுக்கம் விழுப்¢பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார் வள்ளுவர். மேலும் அவர்,
ஒழுக்கத்தை எப்பாடுபட்டாவது காத்தல் வேண்டும்.
ஒழுக்கம் உடையவரின் வாழ்க்கையே உயர்ந்த குடியில் பிறந்தாரின் வாழ்க்கையாகும்.


கற்றக் கல்வியை மறந்தால் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தை மறந்தால் மீண்டும் பெற இயலாது.
ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வு உயர்வடைவதில்லை.
மன வலிமை உடையவர்கள் ஒழுக்கத்தினின்றும் தவறார்.
ஒழுக்கம் உடையவர்கள் எப்பொழுதும் மேன்மை அடைவர்; ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்பொழுதும் கீழ்மை அடைவர். நல்லொழுக்கம் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்; தீயொழுக்கம் எப்பொழுதும் தீமையைச் செய்யும்.
ஏனெனில், இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கம் தவறாது வாழ்ந்தால் ஒட்டு மொத்த சமுதாயமும் நல்லொழுக்க நெறியில் மேன்மையடையும். ஏனெனில் தனி மனிதர்களால் உருவாக்கப்¢படுவதுதான் சமுதாயம். இதைத்தான் வள்ளுவரும்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
என்று கூறுகிறார் போலும்.

புதன், 14 ஜனவரி, 2009

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை:

பொதுவாக பரிந்துரைகள் ஏற்புடையதாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளன.


தேர்வு நிலை /ரீடர் தொடர்பான பரிந்துரைகள் ஏமாற்றம் அளிக்கின்றன.

1. முன்பு முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் மட்டும் ரீடர் ஆகலாம் என்று இருந்தது. முனைவர்ப் பட்டம் முடிக்காதவர்கள் தேர்வுநிலை விரிவுரையாளர்கள்; ஆனால் ஊதியத்தில் வேறுபாடு இல்லை. இதுவே பாரபட்சமான முடிவு ஆகும். தற்பொழுது முனைவர்ப் பட்டம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் Associate Professeor என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரே விதமான ஊதியம். அதாவது 37400 + இதனால் மேற்காட்டிய முரண்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. உயர் கல்வியை வளப்படுத்த நினைக்கும் அரசு அதற்கேற்ப முனைவர்ப் பட்டத்தையும் கட்டாயமாக்க வேண்டும். அதனை முடித்தவர்களுக்கு உரிய மரியாதையையும் பயனையும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


எனவே, முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் (grade) ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


2. முன்பு ரீடர் நிலைக்கு முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் தேவை. அதை ஒத்த நிலையாகக் கருதப் பட்ட தேர்வு நிலைக்கு வருவதற்கு M.Phil. முடித்தவர்களுக்கு 10 ஆண்டுகள் தேவை. இது தற்பொழுது முறையே 12/13 ஆண்டுகள் என்று உயர்த்தப் பட்டுள்ளது. இது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பணி அடைவதற்கான காலம் நீண்டுகொண்டே செல்ல செல்ல பணி மேல் ஆர்வம் குறைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.


எனவே முன்பு போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என்ற நிலையில் Associate Professeor பணி மேம்பாடு கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.


மேலும் தேர்வு நிலை/ரீடர் நிலையில் 3 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்றிய பிறகே Associate Professeor நிலைக்கு வர முடியும் என்பதையும் மாற்றி பழைய நிலை போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என மாற்றி அமைத்தல் வேண்டும்.
இவ்விரண்டு மாற்றங்களும் செய்தால் மட்டுமே இளைஞர்களாகவும் ஏறக்குறைய் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களாகவும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களை இப் பணியில் நிலை நிறுத்தவும் முடியும். அதுபோல் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் விரைந்து பணி மேம்பாடு கிடைக்கும்.


பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிக்க ஆர்வத்துடன் இதை எதிர் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்