வெள்ளி, 27 அக்டோபர், 2017

வ.சுப. மாணிக்கனார்

வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் மன்னன்பந்தல் அன்பநாதபுரம் வகையார் கல்லூரி (ஏவிசி) தமிழ்த்துறையில் (26-28.10.2017) நடைபெற்றது. இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வில் (27.10.2017) நான் அமர்வுத்தலைவராகப் பங்கேற்றேன். கருத்தரங்க நினைவாக வ.சுப. மாணிக்கனார்  பற்றி சில குறிப்புகள்:
  • தோற்றம்               : 17.04.1917
  • பெற்றோர்             : அ.சுப்பையா செட்டியார் - தெய்வானை ஆச்சி
  • இயற்பெயர்          : அண்ணாமலை 
  •  மனைவி               : ஏகம்மை ஆச்சி
  • மகன்கள்                : மூவர் -  1. தொல்காப்பியன்   2. பூங்குன்றன்  3. பாரி
  • மகள்கள்                 : இருவர்  - 1.  தென்றல்   2. பொற்கொடி
  • இறப்பு                      : 25.04.1989 (72 ஆம் அகவையில்) 
  • துயரம்                     : 6 வயதில் தாய் இறப்பு, 7 வயதில் தந்தை இறப்பு
  • தாத்தா-பாட்டி (தாய்வழி) : அண்ணாமலை செட்டியார், மீனாட்சி ஆச்சி இவர்கள் வளர்ப்பில் வாழ்தல்
  • பொய்சொல்லா மாணிக்கம்: 11வயதில் பர்மாவில் உள்ள ரங்கூனில் வட்டிக்கடையில் வேலைக்குச் சேர்தல் - அக்கடையின் முதலாளி,  தன்னைத்தேடி ஒருவர் வருவார்.  அவரிடம் தான்  இல்லை என்று பொய் சொல்லக்கூறுதல் - இவர் உடன்படாமை -  அதனால் வேலையிழப்பு - ஊருக்குத் திரும்புதல் 
  • வித்துவான்: பர்மாவிலிருந்து திரும்பிய பிறகு பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் வழிகாட்டுதலின்படி அண்ணாமலைப் பல்கலையில் வித்துவான் பட்டம் (1936-40)
  • பி.ஓ.எல்: சென்னைப் பல்கலைக்கழகம் (1945)
  • எம்.ஓ.எல். - செ.ப.க. (1946)
  • எம்.ஏ. - செ.ப.க. (1951) - தமிழில் வினைச்சொற்கள்
  • முனைவர் பட்டம்: செ.ப.க. (1957) - தமிழில் அகத்திணைக் கொள்கைகள்
  • பணிகள்: விரிவுரையாளர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1941 - 48
      • பேராசிரியர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1948 - 64
      • முதல்வர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1964 - 70
      • தமிழ்த்துறைத் தலைவர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1970 - 77
      • துணைவேந்தர் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 1979 -82 ( ஊருக்குச் செல்ல  மதுரைப் பேருந்து நிலையம் வரை பல்கலைக்கழக மகிழ்வுந்தில் வந்து பிறகு பேருந்தில் செல்வார்)
  • பட்டங்கள்:
    •  செம்மல் - சன்மார்க்க சபை,
    •  மேலைச்சிவபுரி 1969 முதுபெரும்புலவர் - குன்றக்குடி ஆதீனம்
    •  D.Lit. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழா ஆண்டில் வழங்கப்பட்டது - 1963
    • திருவள்ளுவர் விருது - தமிழக அரசு - 1994 (இறப்புக்குப் பிறகு)
    • பெருந்தமிழ்க் காவலர் - ஈப்போ பாவாணர் சங்கம்
    • முதுபேராய்வாளர் - திராவிட மொழியியற் கழகம்
    • முது ஆராய்ச்சியாளர் - கேரளத் திராவிடமொழிக் கழகம்
    • மூதறிஞர்
    • தமிழ் இமயம்
  • பதவிகள்:
    • தமிழகப் புலவர் குழுத் தலைவர் 
    • பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்
    • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
    • தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்
    • தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியத் தகைஞர்
  • நூல்கள்:32
  • குறிப்பிடத்தக்கவை: மனைவியின் உரிமை (1947), கொடை விளக்கு (1957), தமிழ்க்காதல் (1962), தமிழ்வழிக் கல்வியாக்கம் (1988)
  • சிறப்பு: ஆய்வு வன்மைக்கு: தமிழ்க்காதல், சிந்தனைத் தெளிவுக்கு: வள்ளுவம், புலமை நலத்திற்கு: கம்பர்.
  • தொல்காப்பியம் பயிலாதார் அறிவு குறைபாடு உடையது. 
  • சங்கப் பனுவலைக்கற்றால் கிழம் போம்; கீழ்மையும் போம். (மாணிக்கக் குறள் - 461)
  • குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம் -நெறிக்கோள் இலாத நெஞ்சு நீறைநீர் அலாத ஆறு-மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய் - செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம் (மாமலர்கள் - ப. 60) 
  •  பார்வை: www.tamilheritage.org/thfcms/   www.vspmanickam.com

AVC கல்லூரி, வ.சுப.கருத்தரங்கம்

மன்னன்பந்தலில் உள்ள அ.வ.கல்லூரியில் (AVC) கல்லூரி தமிழ்த்துறையின்  சார்பில் 26.10.2017 முதல் 28.10.2017 வரை மூன்று நாட்கள்  மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் (27.10.2017) நடைபெற்ற முதல் அமர்வில் நான் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றேன். 
கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்கள்
ஆய்வுக் கட்டுரை வழங்குதல்






வியாழன், 26 அக்டோபர், 2017

கருத்தரங்கம்



ஆய்வாளர் உரை



முதல்வர் உரை 

துறைத்தலைவர் உரை

துறைத்தலைவர் உரை
முதல்வர் தலைமை உரை
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். தமிழ்த்துறை 

இக்கல்வியாண்டில் எம்.ஃபில். பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமை அன்று கருத்தரங்கம் நடத்தத் தொடங்கி உள்ளோம்.
இதன் முதல் நிகழ்வாக 25.10.2017 அன்று முற்பகல் 11.00 மணியளவில் கல்லூரி முதல்வர் (பொ.) பேரா.ச.சீத்தாராமன் அவர்கள் தலைமையேற்கவும் தொடக்க உரையை நான் நிகழ்த்தவும் கருத்தரங்கம் இனிதே தொடங்கப்பெற்றது. இதில் முதல் ஆய்வுக் கட்டுரையாக மாணவர் பாக்யராஜ் 'ஆய்வு அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினார். இந்த அரங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து முனைவர் ந.கிருஷ்ணவேணி அவர்கள் ஆய்வாளரையும் அரங்கையும் ஆற்றுப்படுத்தினார்கள். இதில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாண-மாணவியர் பங்கேற்றனர்.

சனி, 7 அக்டோபர், 2017

இலக்கியமும் மனித வாழ்வும்

(கும்பகோணம் மத்திய சுழற்சங்கக் கூட்டத்தில் 02-10-2017 திங்கட்கிழமையன்று இரவு 8 மணியளவில் சுழற்சங்க சமுதாயக் கூடத்தில் நிகழ்த்திய உரை)

விருந்தோம்பலில் 
தன்னினத்தைக் 
கூவியழைக்கும்
காகம் போலிரு

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்

என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. 'விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு' என்பது மூத்தோர் வாக்கு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்



தலைப்பைச் சேருங்கள்

கும்பகோணம் மத்திய சுழற்சங்கத்தில் உரை

02.10.2017 அன்று காந்தி ஜெயந்தி அன்று கும்பகோணம் மத்திய சுழற்சங்கக்கூட்டத்தில் இலக்கியமும் மனித வாழ்வும் என்ற தலைப்பில்
 உரையாற்றினேன்

பரிசளித்தபொழுது
மரகதலெட்சுமி பாத்திரக்கடை உரிமையாளர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் பரிசளித்துப் பாராட்டிய பொழுது


மருத்துவர் பழனிவேல் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பிதபொழுது
மருத்துவர் பழனிவேல் MBBS., DCH.  அவர்கள் பொன்னாடை
 அணிவித்து சிறப்பித்தபொழுது