1.
சொற்களின் வகை
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
397.
|
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
398.
|
அவற்றுள்,
இயற்சொல்தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி, தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
399.
|
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்,
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும், இரு பாற்று' என்ப-'திரிசொல்-கிளவி'. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
400.
|
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
401.
|
வடசொல் கிளவி வட எழுத்து ஓரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
402.402
|
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
403
|
அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை,
வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித்தொகுத்தலும்,
நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழிக்
குறுக்கலும்,
நாட்டல் வலிய' என்மனார் புலவர்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3.
தொகைச்சொல்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
410.
|
'த, ந, நு, எ' எனும் அவை முதல் ஆகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
411.
|
`இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல்,
என்று
அவை மூன்று' என்ப-`ஒரு சொல் அடுக்கே'. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
412.
|
`வேற்றுமைத் தொகையே,
உவமத் தொகையே,
வினையின் தொகையே, பண்பின் தொகையே, உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
413.
|
அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
414.
|
உவமத் தொகையே உவம இயல்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
415.
|
வினையின் தொகுதி காலத்து இயலும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
416.
|
வண்ணத்தின், வடிவின், அளவின், சுவையின், என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி, 'இன்னது இது' என வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின் தொகையே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
417.
|
இரு பெயர், பல பெயர், அளவின் பெயரே,
எண்ணியற் பெயரே, நிறைப் பெயர்க் கிளவி, எண்ணின் பெயரொடு, அவ் அறு கிளவியும் கண்ணிய நிலைத்தே-உம்மைத் தொகையே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
418.
|
பண்பு தொக வரூஉம் கிளவியானும்,
உம்மை தொக்க பெயர்வயினானும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும், ஈற்று நின்று இயலும்-அன்மொழித்தொகையே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
419.
|
'அவைதாம்,
முன் மொழி நிலையலும், பின் மொழி நிலையலும், இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும், அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும், அந் நான்கு' என்ப-'பொருள் நிலை மரபே.' |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
420.
|
எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
421.
|
'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
422.
|
வாரா மரபின வரக் கூறுதலும்,
என்னா மரபின எனக் கூறுதலும், அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான், 'இன்ன' என்னும் குறிப்புரை ஆகும். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
423.
|
இசைப் படு பொருளே நான்கு வரம்பு
ஆகும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
424.
|
விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு
ஆகும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
425.
|
'கண்டீர் என்றா,
கொண்டீர் என்றா,
சென்றது என்றா, போயிற்று என்றா, அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி, நின்ற வழி அசைக்கும் கிளவி' என்ப. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
426.
|
கேட்டை என்றா, நின்றை என்றா,
காத்தை என்றா, கண்டை என்றா, அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி, முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4.
வினைமுற்றின் வகை
|
|||||||||
427.
|
'இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்ற
சிறப்புடை மரபின் அம் முக் காலமும், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் அம் மூஇடத்தான், வினையினும் குறிப்பினும், மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும் அவ் ஆறு' என்ப-'முற்று இயல் மொழியே'. |
||||||||
428.
|
எவ் வயின் வினையும் அவ் இயல்
நிலையும்.
|
||||||||
429.
|
அவைதாம்,
தம்தம் கிளவி அடுக்குந வரினும், எத் திறத்தானும் பெயர் முடிபினவே. |
||||||||
5.
எச்சச் சொற்களின் வகை
|
|||||||||
430.
|
பிரிநிலை வினையே, பெயரே, ஒழியிசை,
எதிர்மறை, உம்மை, எனவே, சொல்லே,
குறிப்பே, இசையே, ஆயீர்-ஐந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட்
கிளவி.
|
||||||||
431.
|
அவற்றுள்,
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின
|
||||||||
432.
|
வினை எஞ்சு கிளவிக்கு வினையும்
குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே;
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.
|
||||||||
433.
|
பெயர் எஞ்சு கிளவி பெயரொடு முடிமே.
|
||||||||
434.
|
ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.
|
||||||||
435.
|
எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின.
|
||||||||
436.
|
உம்மை எச்சம் இரு வீற்றானும்
தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே.
|
||||||||
437.
|
தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை,
நிகழும் காலமொடு வாராக் காலமும்,
இறந்த காலமொடு வாராக் காலமும்,
மயங்குதல் வரையார் முறைநிலையான.
|
||||||||
438.
|
'என' என் எச்சம் வினையொடு முடிமே.
|
||||||||
439.
|
'எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்
எஞ்சு பொருட் கிளவி இல' என மொழிப.
|
||||||||
440.
|
அவைதாம்,
தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும்.
|
||||||||
441.
|
'சொல்' என் எச்சம், முன்னும் பின்னும்,
சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே.
|
||||||||
6.
சில மரபு வகை
|
|||||||||
442.
|
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்!.
|
||||||||
443.
|
மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல்!.
|
||||||||
444.
|
'ஈ, தா, கொடு' எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. |
||||||||
445.
|
அவற்றுள்,
'ஈ' என் கிளவி இழிந்தோன் கூற்றே. |
||||||||
446.
|
'தா' என் கிளவி ஒப்போன் கூற்றே.
|
||||||||
447.
|
'கொடு' என் கிளவி உயர்ந்தோன் கூற்றே.
|
||||||||
448.
|
'கொடு என் கிளவி படர்க்கைஆயினும்,
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் தன்னிடத்து இயலும்' என்மனார் புலவர். |
||||||||
449.
|
பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்,
திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும், தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும், மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும், மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும், அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. |
||||||||
450.
|
'செய்யாய்' என்னும் முன்னிலை வினைச்சொல்
'செய்' என் கிளவி ஆகு இடன் உடைத்தே. |
||||||||
451.
|
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. |
||||||||
452.
|
கடி சொல் இல்லை, காலத்துப் படினே.
|
||||||||
453.
|
குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி
அறிதல்!.
|
||||||||
454.
|
குறைந்தன ஆயினும் நிறைப் பெயர் இயல.
|
||||||||
455.
|
இடைச் சொல் எல்லாம் வேற்றுமைச்
சொல்லே.
|
||||||||
456.
|
உரிச் சொல் மருங்கினும் உரியவை உரிய.
|
||||||||
457.
|
வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய.
|
||||||||
458.
|
உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்!.
|
||||||||
459.
|
முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே,
இன்ன என்னும் சொல்முறையான. |
||||||||
460.
|
ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல
வரையார்.
|
||||||||
461.
|
ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. |
||||||||
462.
|
முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே; ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். |
||||||||
7.
சொல்லதிகாரத்திற்குப் புறனடை
|
|||||||||
463.
|
செய்யுள் மருங்கினும் வழக்கியல்
மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம் பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, சொல் வரைந்து அறிய, பிரித்தனர் காட்டல்!. |
||||||||