ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

2.அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். இவர் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மரபினர். இவருடைய தந்தையார் நெல்வேலி பாண்டியன். இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து ஆட்சி செய்தார். மேலும் கொற்கை நகரை ஆட்சி செய்தமையால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்¢பட்டார். வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, அழகன் சேவகவேள், தமிழ் வளர்த்த தென்னவன் என்ற சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
இவர், நைடதம் என்ற காப்பிய நூலையும், நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்ற நீதி நூலையும், திருக்கருவைப் பதிற்றுப்¢பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா, திருக்கருவை கலித்துறை என்ற அந்தாதி நூல்களையும், கூர்ம புராணம், இலிங்க புராணம், மகாபுராணம் என்ற புராண நூல்களையும், காசி காண்டம், வாயு சங்கீதை என்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றின் வழியாக இவரது புலமைத் திறத்தை நன்கு அறியலாம்.


இவர் எழுதிய காப்பிய நூலான நைடதம் பற்றிக் கூறுவோர் நைடதம் புலவர்க்கு ஒளடதம் என்று வியந்து கூறுவர். ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். நோயுற்றவருக்கு நோய் தீர்க்க மருந்து உதவுகிறது. அம்மருந்தைக் கொடுப்¢பவர் மருத்துவர். அதுபோல அறிவால் நோயுற்ற புலவர்களுக்கு நைடதம் என்ற மருந்தைக் கொடுத்து நோய்ப் போக்கியவர் அதிவீரராம பாண்டியர். கற்றாருள் நன்கு கற்றவர் நனிகற்றவர்; மருத்துவருக்கே மருந்து கொடுக்கும் மருத்துவர் சிறந்த மருத்துவர். அதுபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். தமிழைத் தொடக்கத்தில் பயில்வோர் இந்நூலைத் தவறாது படிப்¢பர் என்பதிலிருந்து இவரது புலமைத்திறம் நன்கு வெளிப்¢படும்.
இலக்கியப் பயிற்சிப் பெற விரும்புவோருக்குச் சிறந்த நூலாக நைடதத்தைக் குறிப்பிடுவர். புலமை சான்றவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நூலைப் படிப்¢பர். இந்நூலை எழுதி முடித்த உடன் அதனைத் தனது அண்ணியாரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னாராம். அதன் பிறகு நூலின் தன்மை குறித்துக் கேட்டாராம்.


மிகுந்த இலக்கிய வாசிப்பும் அறிவுத்திறமும் பெற்ற அண்ணியார் இந்நூலின் நடை வேட்டை நாயின் ஓட்டம் போல இருக்கிறது என்று கூறி பாராட்டினாராம். அருமையான உவமை நயத்துடன் அமைந்துள்ள இவரின் கருத்து இந்நூலின் நடைப்போக்கை நன்கு வெளிப்¢படுத்துவதாக அமைந்துள்ளது.


அதாவது, வேட்டை நாயானது வேட்டைக் கிடைக்கும் வரை மிக வேகமாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் ஓடிக்கொண்டே இருக்கும். வேட்டைக் கிடைத்த உடன் அதன் வேகம் குறைந்து விடும். அதுபோல் இந்த நூல் கதையின் உச்சநிலையை (CLIMAX) அடையும் வரை மிக வேகமாகவும் விருவிருப்பாகவும் செல்கிறது. படிப்¢பவர் கவனம் சிதையாது விரைந்து ஆவலோடு படிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்குப் பிந்தைய பகுதியானது வேட்டைக் கிடைத்தவுடன் வேட்டை நாயின் வேகம் குறைந்து போனதைப் போல விருவிருப்புக் குறைந்து போயுள்ளதாக இந்நூலைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ளார். இதன்மூலம் அதிவீரராம பாண்டியர் திறம்பட நூல் யாப்¢பவர் என்பது தௌ¤வாகிறது.


இவர் எழுதிய நீதி நூலான கொன்றைவேந்தன் ஓர் அரிய நூலாகும். இதனுள் சிறந்த நீதிக்கருத்துகள் அமைந்துள்ளன. இந்நூல் ஆழமும் அகலமும் எளிமையும் உடையது ஆகும். இந்நூலைப் படிப்போர் குற்றங்களை எளிதில் நீக்கி சிறப்புடன் வாழ்வர். இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இவை அமைப்பு முறையில் ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் போன்றவை. இந்நூற் பாடல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தி முறையில் நன்கு அமைந்துள்ளது.


இந்நூற்கண் உள்ள சில பாடல்களின் கருத்தினைக் கேளுங்கள்; யார் யாருக்கு எது அழகு என்று கூறுகிறார்.


• கல்விக்கு அழகு கசடற மொழிதல் - கற்ற கல்வியைப் பிழையில்லாமல் எடுத்துரைப்¢பதே கல்விக்கு அழகாம்.• செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல் - செல்வம் படைத்தோர் - வசதி படைத்தோர் என்போர் உற்றார் உறவினரையும் அக்கம் பக்கத்தாரையும் அரவணைத்து வாழ வேண்டும். அதுவே அவர்களுக்கு அழகாம். • மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - சிறந்த ஆட்சியாளர்கள் என்போர் முறை தவறாது மக்கள் நலம் கருதி அவர்களுக்கு வேண்டுவனவற்றை மக்கள் கேட்காமலேயே செய்து தருவதாகும்.


உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல் - உழவர்கள் தங்கள் நிலங்களில் நன்கு பயிர் செய்து அப்பொருள் மூலம் உண்டு வாழ்தல் அழகாம்.• உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தோடு உண்பதுதான் உணவுக்கு அழகாம்.

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - பல நூல்களையும் கற்றவர்கள் அடக்கமுடன் இருத்தல் அவர்களுக்கு அழகாம்.• வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமை உற்ற காலத்திலும் வறியவர்கள் சிறந்த நெறியினின்று வழுவாது வாழ்தல் அவர்களுக்கு அழகாம்.
இங்ஙனம் பல தரப்¢பட்ட மனிதர்களும் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதை ஒரு வரியிலேயே தௌ¤வுபட எடுத்துக் கூறுகிறார் அதிவீரராம பாண்டியர்.


இதுபோலவே ஒற்றை வரியில் அழுத்தமான வாழ்வியல் சிந்தனைகளை அதிவீரராம பாண்டியர் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றுள் சில;


• பெரியோரெல்லாம் பெரியோரும் அல்லர்.

• உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

• கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

• அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

• சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

• அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

• புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

இங்ஙனம் அதிவீரராம பாண்டியர் தம் சிந்தனைகள் எளிய முறையில் அமைந்து தௌ¤ந்த கருத்தை வெளிப்¢படுத்தும் வகையில் உள்ளன.

கருத்துகள் இல்லை: