ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

2.அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். இவர் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மரபினர். இவருடைய தந்தையார் நெல்வேலி பாண்டியன். இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து ஆட்சி செய்தார். மேலும் கொற்கை நகரை ஆட்சி செய்தமையால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்¢பட்டார். வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, அழகன் சேவகவேள், தமிழ் வளர்த்த தென்னவன் என்ற சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
இவர், நைடதம் என்ற காப்பிய நூலையும், நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்ற நீதி நூலையும், திருக்கருவைப் பதிற்றுப்¢பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா, திருக்கருவை கலித்துறை என்ற அந்தாதி நூல்களையும், கூர்ம புராணம், இலிங்க புராணம், மகாபுராணம் என்ற புராண நூல்களையும், காசி காண்டம், வாயு சங்கீதை என்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றின் வழியாக இவரது புலமைத் திறத்தை நன்கு அறியலாம்.


இவர் எழுதிய காப்பிய நூலான நைடதம் பற்றிக் கூறுவோர் நைடதம் புலவர்க்கு ஒளடதம் என்று வியந்து கூறுவர். ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். நோயுற்றவருக்கு நோய் தீர்க்க மருந்து உதவுகிறது. அம்மருந்தைக் கொடுப்¢பவர் மருத்துவர். அதுபோல அறிவால் நோயுற்ற புலவர்களுக்கு நைடதம் என்ற மருந்தைக் கொடுத்து நோய்ப் போக்கியவர் அதிவீரராம பாண்டியர். கற்றாருள் நன்கு கற்றவர் நனிகற்றவர்; மருத்துவருக்கே மருந்து கொடுக்கும் மருத்துவர் சிறந்த மருத்துவர். அதுபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். தமிழைத் தொடக்கத்தில் பயில்வோர் இந்நூலைத் தவறாது படிப்¢பர் என்பதிலிருந்து இவரது புலமைத்திறம் நன்கு வெளிப்¢படும்.
இலக்கியப் பயிற்சிப் பெற விரும்புவோருக்குச் சிறந்த நூலாக நைடதத்தைக் குறிப்பிடுவர். புலமை சான்றவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நூலைப் படிப்¢பர். இந்நூலை எழுதி முடித்த உடன் அதனைத் தனது அண்ணியாரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னாராம். அதன் பிறகு நூலின் தன்மை குறித்துக் கேட்டாராம்.


மிகுந்த இலக்கிய வாசிப்பும் அறிவுத்திறமும் பெற்ற அண்ணியார் இந்நூலின் நடை வேட்டை நாயின் ஓட்டம் போல இருக்கிறது என்று கூறி பாராட்டினாராம். அருமையான உவமை நயத்துடன் அமைந்துள்ள இவரின் கருத்து இந்நூலின் நடைப்போக்கை நன்கு வெளிப்¢படுத்துவதாக அமைந்துள்ளது.


அதாவது, வேட்டை நாயானது வேட்டைக் கிடைக்கும் வரை மிக வேகமாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் ஓடிக்கொண்டே இருக்கும். வேட்டைக் கிடைத்த உடன் அதன் வேகம் குறைந்து விடும். அதுபோல் இந்த நூல் கதையின் உச்சநிலையை (CLIMAX) அடையும் வரை மிக வேகமாகவும் விருவிருப்பாகவும் செல்கிறது. படிப்¢பவர் கவனம் சிதையாது விரைந்து ஆவலோடு படிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்குப் பிந்தைய பகுதியானது வேட்டைக் கிடைத்தவுடன் வேட்டை நாயின் வேகம் குறைந்து போனதைப் போல விருவிருப்புக் குறைந்து போயுள்ளதாக இந்நூலைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ளார். இதன்மூலம் அதிவீரராம பாண்டியர் திறம்பட நூல் யாப்¢பவர் என்பது தௌ¤வாகிறது.


இவர் எழுதிய நீதி நூலான கொன்றைவேந்தன் ஓர் அரிய நூலாகும். இதனுள் சிறந்த நீதிக்கருத்துகள் அமைந்துள்ளன. இந்நூல் ஆழமும் அகலமும் எளிமையும் உடையது ஆகும். இந்நூலைப் படிப்போர் குற்றங்களை எளிதில் நீக்கி சிறப்புடன் வாழ்வர். இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இவை அமைப்பு முறையில் ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் போன்றவை. இந்நூற் பாடல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தி முறையில் நன்கு அமைந்துள்ளது.


இந்நூற்கண் உள்ள சில பாடல்களின் கருத்தினைக் கேளுங்கள்; யார் யாருக்கு எது அழகு என்று கூறுகிறார்.


• கல்விக்கு அழகு கசடற மொழிதல் - கற்ற கல்வியைப் பிழையில்லாமல் எடுத்துரைப்¢பதே கல்விக்கு அழகாம்.• செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல் - செல்வம் படைத்தோர் - வசதி படைத்தோர் என்போர் உற்றார் உறவினரையும் அக்கம் பக்கத்தாரையும் அரவணைத்து வாழ வேண்டும். அதுவே அவர்களுக்கு அழகாம். • மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - சிறந்த ஆட்சியாளர்கள் என்போர் முறை தவறாது மக்கள் நலம் கருதி அவர்களுக்கு வேண்டுவனவற்றை மக்கள் கேட்காமலேயே செய்து தருவதாகும்.


உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல் - உழவர்கள் தங்கள் நிலங்களில் நன்கு பயிர் செய்து அப்பொருள் மூலம் உண்டு வாழ்தல் அழகாம்.• உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தோடு உண்பதுதான் உணவுக்கு அழகாம்.

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - பல நூல்களையும் கற்றவர்கள் அடக்கமுடன் இருத்தல் அவர்களுக்கு அழகாம்.• வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமை உற்ற காலத்திலும் வறியவர்கள் சிறந்த நெறியினின்று வழுவாது வாழ்தல் அவர்களுக்கு அழகாம்.
இங்ஙனம் பல தரப்¢பட்ட மனிதர்களும் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதை ஒரு வரியிலேயே தௌ¤வுபட எடுத்துக் கூறுகிறார் அதிவீரராம பாண்டியர்.


இதுபோலவே ஒற்றை வரியில் அழுத்தமான வாழ்வியல் சிந்தனைகளை அதிவீரராம பாண்டியர் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றுள் சில;


• பெரியோரெல்லாம் பெரியோரும் அல்லர்.

• உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

• கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

• அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

• சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

• அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

• புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

இங்ஙனம் அதிவீரராம பாண்டியர் தம் சிந்தனைகள் எளிய முறையில் அமைந்து தௌ¤ந்த கருத்தை வெளிப்¢படுத்தும் வகையில் உள்ளன.

திருவள்ளுவரின் சிந்தனைகள்

1. திருவள்ளுவரின் சிந்தனைகள்


ஒழுக்கம் பற்றி கூறாத அறநூல்களே உலகில் இல்லை. ஆன்மீகத்தின் இருப்பிடமான இந்தியத் திருநாட்டில் தோன்றிய வேதங்கள், ஞானநூல்கள், ஐம்பெருங் காப்பியங்கள், இராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், சீறாப்புராணம் போன்ற மாபெரும் இலக்கியங்கள் அனைத்துமே மனித இனத்திற்குத் தேவையான பல்வேறு நல்லொழுக்க நெறிகளை வலியுறுத்துவதை அடிப்¢படை நோக்கமாகக் கொண்டு எழுந்துள்ளமையைக் காண முடிகிறது. இந்த ஒழுக்க நெறிதான் விலங்கு வாழ்க்கையினின்று மனித வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டுகிறது.


ஒழுக்கம் பற்றிய வரையறை நாட்டுக்கு நாடு - இனத்துக்கு இனம் - காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் நம்பிக்கை, மரபு, சூழல் இவற்றிற்கு ஏற்பவும் ஒழுக்கம் பற்றிய விளக்கம் மாறுபட்டுப் போகிறது.


இச்சொல் ‘ஒழுகு’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தல் ஆகும். இன்னும் தௌ¤வாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவயான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைபிடிப்¢பதாகும்.
ஒழுக்கம் என்பதற்கு நடை, சீலம், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்¢பட்ட நல்ல பண்புகள், கடமை தவறாது நடத்தல், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றெல்லாம் பொருள் கூறலாம்.


ஒழுக்கத்தின் அங்கங்களாக அன்பு, அருள், கருணை, இரக்கம், பாசம், தியாகம், தொண்டு, பண்பு, பொறை, பணிவு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர்.


• ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்¢பது அல்ல; கெட்ட செய்கையை செய்யாமல் இருப்¢பதுதான் என்பார் அறிஞர் பெர்னாட்சா.

• யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலையாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று மனித ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறுகிறார் திருமூலர்.

அதாவது நம் பங்கில் ஒரு பிடியையாவது நம் எதிரில் பசியோடு இருப்¢பவனுக்குத் தருதல் வேண்டும்; அது முடியாது போகுமிடத்து மனதார ஒரு வாழ்த்தையாவது- இன்சொல்லையாவது கூறுதல் மனித குலத்திற்கு இன்றியமையாத ஒழுக்கமாகும். • இராமலிங்க வள்ளலார் ஒழுக்கங்களை நான்கு வகைப்¢படுத்திக் காட்டுகிறார். அவை;


1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம்

 இந்திரிய ஒழுக்கம்; உடலால் தூய்மையாக இருத்தல் தீயதைக் கேளாமல் இருத்தல் பிறர் மனம் புண்படப் பேசாமல் இருத்தல் பிறரைக் குரூரமாக பாராமல் இருத்தல் இனிய சொற்களைக் கூறல் இரக்கம் காட்டல் கருணை உள்ளம் உடையவராக இருத்தல் சத்தியம் நிறைந்திருத்தல்


 கரண ஒழுக்கம்; அன்பு, அருள், உயிர், இரக்கம் ஆகியவற்றை மனத்தில் இறுத்தி வாழ்தல். காமக்குரோதம், லோபம், மோகம், மத மாச்சர்யம் ஆகியவற்றை மனத்தில் இருந்து விலக்கி மனத்தை என்றும் தூய்மையாக வைத்திருத்தல்.
பிறர் குற்றம் காணாதிருத்தல்

 ஜீவ ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் தன் உயிராக எண்ணி வாழ்தல். அவ்வுயிர்களுக்கு ஏற்பட்டத் துன்பத்தைத் தனக்கு ஏற்பட்டதாகக் கருதி அதனைப் போக்கிட முனைதல்.
ஜீவகாருண்யம் என்று சொல்லப்¢படுகின்ற உயிரிரக்கத்தோடு எப்பொழுதும் வாழ்தல் - அதனைக் கடைபிடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்தல்.


 ஆன்ம ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயிலாகக் கருதி அவ்வுயிர்களின் உள் ஒளியை வழிபடுதல்.
இந்த ஒழுக்கம் பற்றிய செய்தித் திருக்குறள் முழுவதும் பரக்கக் காணப்படுகிறது.

அடக்கமுடைமை, அருளுடைமை, அவா அறுத்தல், அவை அறிதல், அழுக்காறாமை, அறன் வலியுறுத்தல், அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடன் அறிதல், காலம் அறிதல், இல்வாழ்க்கை, இறைமாட்சி, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஊக்கம்உடைமை, ஒப்புரவறிதல், கண்ணோட்டம், கயமை, கல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, கல்வி, குடிசெயல் வகை, குடிமை, குறிப்¢பறிதல், குற்றங்கடிதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கேள்வி, கொடுங்கோன்மை, கொல்லாமை, சான்றாண்மை, சிற்றினம் சேராமை, சுற்றந்தழால், செய்ந்நன்றி அறிதல், தெரிந்து செயல் வகை, தெரிந்து தௌ¤தல், தெரிந்து வினையாடல், நடுவுநிலைமை, நாணுடைமை, பண்புடைமை, பயனில சொல்லாமை, பிறனில் விழையாமை, புலால் மறுத்தல், புறங்கூறாமை, பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை, பொறையுடைமை, மடியின்மை, வாய்மை, விருந்தோம்பல், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைத் திருவள்ளுவர் எடுத்துக்கூறுகிறார்.


இக்கருத்துக்களின் முத்தாய்ப்பாக ஒழுக்கமுடைமை என்றஅதிகாரத்தில்,
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. மனிதர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தம் உயிரை இழப்¢பதற்கு ஒப்¢ப மாட்டார்கள். அந்த விலை மதிக்க முடியாத உயிரைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது என்பதை
ஒழுக்கம் விழுப்¢பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார் வள்ளுவர். மேலும் அவர்,
ஒழுக்கத்தை எப்பாடுபட்டாவது காத்தல் வேண்டும்.
ஒழுக்கம் உடையவரின் வாழ்க்கையே உயர்ந்த குடியில் பிறந்தாரின் வாழ்க்கையாகும்.


கற்றக் கல்வியை மறந்தால் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தை மறந்தால் மீண்டும் பெற இயலாது.
ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வு உயர்வடைவதில்லை.
மன வலிமை உடையவர்கள் ஒழுக்கத்தினின்றும் தவறார்.
ஒழுக்கம் உடையவர்கள் எப்பொழுதும் மேன்மை அடைவர்; ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்பொழுதும் கீழ்மை அடைவர். நல்லொழுக்கம் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்; தீயொழுக்கம் எப்பொழுதும் தீமையைச் செய்யும்.
ஏனெனில், இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கம் தவறாது வாழ்ந்தால் ஒட்டு மொத்த சமுதாயமும் நல்லொழுக்க நெறியில் மேன்மையடையும். ஏனெனில் தனி மனிதர்களால் உருவாக்கப்¢படுவதுதான் சமுதாயம். இதைத்தான் வள்ளுவரும்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
என்று கூறுகிறார் போலும்.