வெள்ளி, 14 ஜூன், 2013

புதிய கட்டடத் திறப்பு விழா

                    புதிய கட்டடத்தின் முகப்புத் தோற்றம்

                                      திறப்பு விழா பலகை


திறப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள்

திறப்பு விழாவில் நான், மண்டலத்தலைவர் முனைவர் பெ.வடிவேல்


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா 12.06.2013 அதிகாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது. புதிய கட்டடத்தை மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலுருந்தும் சுமார் 200 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சை மண்டலத்திலிருந்து நான், மண்டலத் தலைவர் முனைவர் பெ.வடிவேல், ஜே.ஏ.சி. உறுப்பினர் முனைவர் தி.அறிவுடைநம்பி, சரபோஜி கல்லூரி செயலர் முனைவர் வி.பாரி, கும்பகோணம் ஆடவர் கல்லூரி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர் சு.முத்துநடேசன், மன்னார்குடி கல்லூரி முனைவர் மு.வீராசாமி, கிளைச்செயலர் நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டோம். கட்டடம் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் உள்ளது. சிறந்த முறையில் கட்டடம் அமைவதற்கு உதவிய மாநிலப்பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், கிளைப்பொறுப்பாளர்கள், நிதி உதவி நல்கிய அனைத்து உறுப்பினர்கள், கட்ட ஒப்பந்ததாரர் திரு அர்ஜீன்ன் ஆகிய அனைவருக்கும் மனமுவந்த நன்றியும் பாராட்டுகளும்.