ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தமிழாய்வில் இணையப் பயன்பாடு

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இணையத்தமிழ் என்னும் பொருண்மையிலானக் கருத்தரங்கு 31-03-2016 அன்று   நடைபெற்றது.         இக்கருத்தரங்கை மாண்பமை துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் அவர்கள்      தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா. இந்து  அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.   சமூக அறிவியல் துறை வளர்தமிழ்ப்புலத் தலைவர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்  செ.சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இக்கருத்தரங்கில்   நான் பங்கேற்று, தமிழாய்வில் இணையப்பயன்பாடு என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினேன். இக்கருத்தரங்கில்    துறைக்கருத்தரங்கக்               கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அர.கமலதியாகராசன் அவர்கள் நன்றி நவின்றார். 

இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் மற்றும் தினகரன் இதழில் வெளிவந்த             செய்தி   இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.