சனி, 15 ஜூலை, 2017

சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்

கும்பகோணத்தில் பொன்னி இலக்கியச் சுற்றம் இயங்கி வருகிறது. இதனை முன்னின்று நடத்தி வருபவர்கள் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஜே.பிலோமின்ராஜ், தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.மணி ஆகியோர் ஆவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயற்பட்டு வருபவர் அன்னைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் செ.கணேசமூர்த்தி.

இதன் 19வது கூட்டம் இன்று (15.07.2017) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு 'சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.