புதன், 14 ஜனவரி, 2009

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை:

பொதுவாக பரிந்துரைகள் ஏற்புடையதாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளன.


தேர்வு நிலை /ரீடர் தொடர்பான பரிந்துரைகள் ஏமாற்றம் அளிக்கின்றன.

1. முன்பு முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் மட்டும் ரீடர் ஆகலாம் என்று இருந்தது. முனைவர்ப் பட்டம் முடிக்காதவர்கள் தேர்வுநிலை விரிவுரையாளர்கள்; ஆனால் ஊதியத்தில் வேறுபாடு இல்லை. இதுவே பாரபட்சமான முடிவு ஆகும். தற்பொழுது முனைவர்ப் பட்டம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் Associate Professeor என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரே விதமான ஊதியம். அதாவது 37400 + இதனால் மேற்காட்டிய முரண்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. உயர் கல்வியை வளப்படுத்த நினைக்கும் அரசு அதற்கேற்ப முனைவர்ப் பட்டத்தையும் கட்டாயமாக்க வேண்டும். அதனை முடித்தவர்களுக்கு உரிய மரியாதையையும் பயனையும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


எனவே, முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் (grade) ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


2. முன்பு ரீடர் நிலைக்கு முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் தேவை. அதை ஒத்த நிலையாகக் கருதப் பட்ட தேர்வு நிலைக்கு வருவதற்கு M.Phil. முடித்தவர்களுக்கு 10 ஆண்டுகள் தேவை. இது தற்பொழுது முறையே 12/13 ஆண்டுகள் என்று உயர்த்தப் பட்டுள்ளது. இது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பணி அடைவதற்கான காலம் நீண்டுகொண்டே செல்ல செல்ல பணி மேல் ஆர்வம் குறைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.


எனவே முன்பு போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என்ற நிலையில் Associate Professeor பணி மேம்பாடு கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.


மேலும் தேர்வு நிலை/ரீடர் நிலையில் 3 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்றிய பிறகே Associate Professeor நிலைக்கு வர முடியும் என்பதையும் மாற்றி பழைய நிலை போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என மாற்றி அமைத்தல் வேண்டும்.
இவ்விரண்டு மாற்றங்களும் செய்தால் மட்டுமே இளைஞர்களாகவும் ஏறக்குறைய் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களாகவும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களை இப் பணியில் நிலை நிறுத்தவும் முடியும். அதுபோல் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் விரைந்து பணி மேம்பாடு கிடைக்கும்.


பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிக்க ஆர்வத்துடன் இதை எதிர் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: