வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது பயிலரங்கம்

  அமர்வு அறிமுக உரையில்  முனைவர் சா.உதயசூரியன்
        
                           அமர்வில் உரையாற்றுகையில்.
                        
                      அமர்வில் உரையாற்றுகையில்....
                     மாணவர்களுடன் கலந்துரையாடல்
                         நன்றி கூறும் மலேசிய மாணவி
                        நினைவுப் பரிசு வழங்கல்
                    அமர்வை நிறைவு செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை இணைந்து 28-01-2013 முதல் 06-02-2013 வரை  மலேசியத் தமிழ் மாணவர்களுக்கானப் பயிலரங்கத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  நடத்துகின்றன. திணை நிலை நோக்கில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் என்னும் மையப் பொருண்மையிலான இப்பயிலரங்கத்தில் நான் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்னும் தலைப்பில் 01-02-2013 முற்பகல் 11.30 மணி முதல் 1.00 மணி வரை பயிலரங்க உரை நிகழ்த்தினேன். இப்பயிலரங்கில் மலேசிய நாட்டின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 40 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். என் உரையைக் கூர்ந்து அவர்கள் கேட்டமை, ஆர்வமுடன் வினாக்கள் தொடுத்தமை முதலானவை எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தன. அவர்கள் நல்ல தமிழிலும் பேசுகின்றனர்.

கருத்துகள் இல்லை: