திங்கள், 17 பிப்ரவரி, 2014

முத்தொள்ளாயிரம்... சில சிந்தனைகள்

முத்தொள்ளாயிரம்...  சில சிந்தனைகள்

  • செவ்வியல் இலக்கியங்களுள் ஒன்று
  • செவ்வியல் இலக்கியங்கிளுள் ஆயிரம் என்ற பெயரில் தொடங்கும் ஒரே நூல்
  • முத்தொள்ளாயிரம் போல் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் இருந்ததாகத் தெரிகிறது.
  • மூவேந்தர்கள் பற்றி 900 பாடல்கள் வீதம் 2700 பாடல்கள் கொண்டது என்பர்.
  • ஆயினும் மூன்று தொள்ளாயிரமா?  முத்தொள்ளாயிரமா? (மூவருக்கும் சேர்த்து தொள்ளாயிரமா) என்ற ஐயம் உண்டு.
  • புறத்திரட்டு நூல்களின் வழி 108 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • 1905இல் இரா.இராகவையங்கார் 110 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரப் பதிப்பை முதன்முதலாக வெளியிட்டார்.
  • டி.கே.சி.இரசிகமணி 99 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரப் பதிப்பை வெளியிட்டார். 1946இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 130 பாடல்களைக் கொண்ட பதிப்பை வெளியிட்டது. 
  • இதன் பதிப்பாசிரியர் ந.சேதுரகுநாதன். இதில் கடவுள் வாழ்த்து - 1, பாண்டிய மன்னர் பற்றி 60 பாடல்கள், சேழ மன்னர் பற்றி 46 பாடல்கள், சேர மன்னர் பற்றி 23 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
  • சிறந்த காதல் கவிதைகளைக் கொண்டது.
  • தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் 
        தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
       வண்டுலா அங்கண்ணி வயமான்தேர்க் கோதையைக் 
       கண்டுலாஅம் வீதிக் கதவு.
இப்பாடலைப் புதுக் கவிதை நடையில் கீழ் வருமாறு கூறியுள்ளார் ஒரு கவிஞர் (இணையத்தில் படித்தது. பெயர் நினைவிலில்லை)

பறந்தோடும் புரவித் தேரில் 
வண்டுமொய் ம்மாலையணிந்து வரும்
சேரனுலாக் காண கன்னியர்
கதவு திறக்க - அன்னையர்
அக்கதவடைக்க அப்போரில்
தேய்ந்ததே கதவின் குடுமி

மற்றொரு பாடல்:

கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை - அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்

இப்பாடலின் புதுக்கவிதை வடிவம்:

கடலொத்தப் படை
கொண்ட சேரனைப் பாரா
வண்ணம் தாய்
கதவடைத்தாலும் - நான்
கொண்டக் காதலை
ஊர் அவனிடம் சொல்லுமே - தடை
செய்ய இயலுமோ அதை.

கருத்துகள் இல்லை: