ஞாயிறு, 16 மார்ச், 2014

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்    

    திருச்சி புனித வளனார் (தன்னாட்சி) கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையுடன்  மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்னும் பொதுப்பொருண்மையில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கில் நான் 10.03.2014 அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினேன்.

   
 
    மிக நன்முறையில் பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் ஒவ்வொருவருக்கும் இணைய இணைப்புடன் கூடிய கணினி வழங்கப்பட்டிருந்தது. அதனால் நான் ஒரு தளம் பற்றி கூறியவுடன் பங்கேற்பாளர்கள் தாங்களே அத்தளத்திற்குள் சென்று செய்திகளைத் தேடி அறிந்து கொண்டனர். இது அவர்களுக்குப் பயனளிப்பதாக இருந்தது. 

    அது போல நானும் எனது கருத்துரையை 'பென் டிரைவில்' எடுத்துச் செல்லாமல் கூகுள் இயக்ககத்தில் சேமித்து எடுத்துச் சென்றிருந்தேன். அதிலிருந்து நேரடியாக இணைய உதவியுடன் எடுத்துக் கருத்துரை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு வியப்பாகவும் புதிய ஒரு செய்தி கிட்டியதாகவும் கருதினர். அவர்களும் கூகுள் இயக்ககம் பற்றி அறிந்துகொண்டு பயன்படுத்தத் தொடங்கினர். நிகழ்ச்சியை நன்முறையில் ஏற்பாடு செய்திருந்து பயலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பாராட்டுதலுக்கு உரியவர்.

   இது போன்ற நேரடி இணைய இணைப்பு வழி கலந்துரையாடல்கள்தான் இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தேவை என்று நான் கருதுகிறேன்.

1 கருத்து:

pattukkottati ramesh சொன்னது…

வாழ்த்துக்கள் அய்யா. இது போன்று தமிழ்ழசிரியர்கள் ஊடகவியலில் மிக அதிகமான பங்கேற்பு செய்யும்போது தமிழின் நிலை தமிழனால் உயரும் என்பது திண்ணம்.