திங்கள், 14 ஜனவரி, 2008

தமிழர்த் திருநாள்

தமிழர்த் திருநாளாம்
தைத் திருநாளில்
தரணியெங்கும்
தமிழ்த் தையர்களெல்லாம்
மண் பானைப் பொங்கலிட்டுக்
கதிரவனுக்குப்
பணிவுடனே படையலிடுவர்.

உழைப்பின் அடையாளமாம்
உழவர்களின் உற்ற துணைவனாம் காளைகள்
உழைத்து உழைத்து
உன்னதமான செல்வங்களை
உழவர்களுக்கு
உயர்வு பெற வழங்கிடும்

உதவும் பொருள்களை
உத்தமனாம் உழவனுக்கு
அளித்திட்ட காளைகள்
பயனற்றப் பொருட்களாம்
வைக்கோல் தவிடு உள்ளிட்ட
தேவையற்றப் பொருள்களைத் தானுண்டு
உயிர் வாழ்ந்திடும்

இத்தகு
உத்தமக் குணம் படைத்த
உழவாரப் படையாளிகளுக்கு
உண்மையாய் நன்றிகாட்டும்
உயர்வான விழாவாக
மாட்டுப் பொங்கலை
உளம் குளிர நிகழ்த்திடுவான்
உழவன்



கருத்துகள் இல்லை: