ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

திருவள்ளுவரின் சிந்தனைகள்

1. திருவள்ளுவரின் சிந்தனைகள்


ஒழுக்கம் பற்றி கூறாத அறநூல்களே உலகில் இல்லை. ஆன்மீகத்தின் இருப்பிடமான இந்தியத் திருநாட்டில் தோன்றிய வேதங்கள், ஞானநூல்கள், ஐம்பெருங் காப்பியங்கள், இராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், சீறாப்புராணம் போன்ற மாபெரும் இலக்கியங்கள் அனைத்துமே மனித இனத்திற்குத் தேவையான பல்வேறு நல்லொழுக்க நெறிகளை வலியுறுத்துவதை அடிப்¢படை நோக்கமாகக் கொண்டு எழுந்துள்ளமையைக் காண முடிகிறது. இந்த ஒழுக்க நெறிதான் விலங்கு வாழ்க்கையினின்று மனித வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டுகிறது.


ஒழுக்கம் பற்றிய வரையறை நாட்டுக்கு நாடு - இனத்துக்கு இனம் - காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் நம்பிக்கை, மரபு, சூழல் இவற்றிற்கு ஏற்பவும் ஒழுக்கம் பற்றிய விளக்கம் மாறுபட்டுப் போகிறது.


இச்சொல் ‘ஒழுகு’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தல் ஆகும். இன்னும் தௌ¤வாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவயான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைபிடிப்¢பதாகும்.
ஒழுக்கம் என்பதற்கு நடை, சீலம், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்¢பட்ட நல்ல பண்புகள், கடமை தவறாது நடத்தல், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றெல்லாம் பொருள் கூறலாம்.


ஒழுக்கத்தின் அங்கங்களாக அன்பு, அருள், கருணை, இரக்கம், பாசம், தியாகம், தொண்டு, பண்பு, பொறை, பணிவு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர்.


• ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்¢பது அல்ல; கெட்ட செய்கையை செய்யாமல் இருப்¢பதுதான் என்பார் அறிஞர் பெர்னாட்சா.

• யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலையாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று மனித ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறுகிறார் திருமூலர்.

அதாவது நம் பங்கில் ஒரு பிடியையாவது நம் எதிரில் பசியோடு இருப்¢பவனுக்குத் தருதல் வேண்டும்; அது முடியாது போகுமிடத்து மனதார ஒரு வாழ்த்தையாவது- இன்சொல்லையாவது கூறுதல் மனித குலத்திற்கு இன்றியமையாத ஒழுக்கமாகும். • இராமலிங்க வள்ளலார் ஒழுக்கங்களை நான்கு வகைப்¢படுத்திக் காட்டுகிறார். அவை;


1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம்

 இந்திரிய ஒழுக்கம்; உடலால் தூய்மையாக இருத்தல் தீயதைக் கேளாமல் இருத்தல் பிறர் மனம் புண்படப் பேசாமல் இருத்தல் பிறரைக் குரூரமாக பாராமல் இருத்தல் இனிய சொற்களைக் கூறல் இரக்கம் காட்டல் கருணை உள்ளம் உடையவராக இருத்தல் சத்தியம் நிறைந்திருத்தல்


 கரண ஒழுக்கம்; அன்பு, அருள், உயிர், இரக்கம் ஆகியவற்றை மனத்தில் இறுத்தி வாழ்தல். காமக்குரோதம், லோபம், மோகம், மத மாச்சர்யம் ஆகியவற்றை மனத்தில் இருந்து விலக்கி மனத்தை என்றும் தூய்மையாக வைத்திருத்தல்.
பிறர் குற்றம் காணாதிருத்தல்

 ஜீவ ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் தன் உயிராக எண்ணி வாழ்தல். அவ்வுயிர்களுக்கு ஏற்பட்டத் துன்பத்தைத் தனக்கு ஏற்பட்டதாகக் கருதி அதனைப் போக்கிட முனைதல்.
ஜீவகாருண்யம் என்று சொல்லப்¢படுகின்ற உயிரிரக்கத்தோடு எப்பொழுதும் வாழ்தல் - அதனைக் கடைபிடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்தல்.


 ஆன்ம ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயிலாகக் கருதி அவ்வுயிர்களின் உள் ஒளியை வழிபடுதல்.
இந்த ஒழுக்கம் பற்றிய செய்தித் திருக்குறள் முழுவதும் பரக்கக் காணப்படுகிறது.

அடக்கமுடைமை, அருளுடைமை, அவா அறுத்தல், அவை அறிதல், அழுக்காறாமை, அறன் வலியுறுத்தல், அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடன் அறிதல், காலம் அறிதல், இல்வாழ்க்கை, இறைமாட்சி, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஊக்கம்உடைமை, ஒப்புரவறிதல், கண்ணோட்டம், கயமை, கல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, கல்வி, குடிசெயல் வகை, குடிமை, குறிப்¢பறிதல், குற்றங்கடிதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கேள்வி, கொடுங்கோன்மை, கொல்லாமை, சான்றாண்மை, சிற்றினம் சேராமை, சுற்றந்தழால், செய்ந்நன்றி அறிதல், தெரிந்து செயல் வகை, தெரிந்து தௌ¤தல், தெரிந்து வினையாடல், நடுவுநிலைமை, நாணுடைமை, பண்புடைமை, பயனில சொல்லாமை, பிறனில் விழையாமை, புலால் மறுத்தல், புறங்கூறாமை, பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை, பொறையுடைமை, மடியின்மை, வாய்மை, விருந்தோம்பல், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைத் திருவள்ளுவர் எடுத்துக்கூறுகிறார்.


இக்கருத்துக்களின் முத்தாய்ப்பாக ஒழுக்கமுடைமை என்றஅதிகாரத்தில்,
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. மனிதர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தம் உயிரை இழப்¢பதற்கு ஒப்¢ப மாட்டார்கள். அந்த விலை மதிக்க முடியாத உயிரைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது என்பதை
ஒழுக்கம் விழுப்¢பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார் வள்ளுவர். மேலும் அவர்,
ஒழுக்கத்தை எப்பாடுபட்டாவது காத்தல் வேண்டும்.
ஒழுக்கம் உடையவரின் வாழ்க்கையே உயர்ந்த குடியில் பிறந்தாரின் வாழ்க்கையாகும்.


கற்றக் கல்வியை மறந்தால் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தை மறந்தால் மீண்டும் பெற இயலாது.
ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வு உயர்வடைவதில்லை.
மன வலிமை உடையவர்கள் ஒழுக்கத்தினின்றும் தவறார்.
ஒழுக்கம் உடையவர்கள் எப்பொழுதும் மேன்மை அடைவர்; ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்பொழுதும் கீழ்மை அடைவர். நல்லொழுக்கம் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்; தீயொழுக்கம் எப்பொழுதும் தீமையைச் செய்யும்.
ஏனெனில், இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கம் தவறாது வாழ்ந்தால் ஒட்டு மொத்த சமுதாயமும் நல்லொழுக்க நெறியில் மேன்மையடையும். ஏனெனில் தனி மனிதர்களால் உருவாக்கப்¢படுவதுதான் சமுதாயம். இதைத்தான் வள்ளுவரும்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
என்று கூறுகிறார் போலும்.

1 கருத்து:

varsh சொன்னது…

arumaiyana karuthukkal iyya. idhai ovvoruvarum padithu pinpatra vendum.