திங்கள், 30 நவம்பர், 2009

திருமாவுண்ணி - கண்ணகி

சங்க இலக்கியத்தில் திருமாவுண்ணி என்னும் பத்தினிப் பெண் கூறப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறப்படுகிறாள். இருவருமே கணவனை இழந்தவர்கள். ஒரு முலையை இழந்தவர்கள். இதன் காரணமாக இருவரும் ஒருவரே என்று சொல்லப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இருவரும் வேறானவர்கள். இதற்கான காரணத்தை மயிலைசீனி.வேங்கடசாமி நன்கு ஆராய்ந்து விளக்கிக் கூறுகிறார்.
இருவரும் ஒருவரே என்பதற்கான காரணங்கள்:


1 இருவருமே கணவனை இழந்தவர்கள்
2 இருவருமே ஒரு முலையை இழந்தவர்கள்
3 வேங்கை மர நிழலில் அமர்ந்து இருந்தவர்கள்


இருவரும் வேறானவர்கள் என்பதற்கான காரணங்கள்: தினைப்புனம் காவல் காக்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.


திருமாவுண்ணி:

இவள் வேங்கை மர நிழலில் உயிர் விடவில்லை.

இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்பட்டிருந்தது.
இவள் தன் கொங்கையை அறுத்தது வேங்கை மரத்துக்கு அருகில்.


கண்ணகி:

இவள் வழிநடைப் பயணக் களைப்பு நீங்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.

இவள் வேங்கை மரத்து நிழலில் உயிர் விட்டாள்.


இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்படவில்லை.
இவள் கொங்கை அறுத்து வீசியது மதுரை மாநகரத்தில்.

எனவே திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறானவர்கள்.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் கட்டுரைகள் யாவும் பயனுள்ளனவாக உள்ளன..