சனி, 25 பிப்ரவரி, 2017

மூவகை மனிதர்

உலக உயிர்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளார் தொல்காப்பியர். திருவள்ளுவர் "செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்" என்று இருவகைப்படுத்தி உள்ளார். சேக்கிழாரும் செயற்கரிய செய்தவர்களைப் பெரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் வாழு மனிதர்களை ஔவையார், இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று கூறியதை அனைவரும் அறிவோம். ஆனால் அவரே மூவகை மனிதரைக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பலரும் அறிந்திருப்பரா எனத் தெரியவில்லை.

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் ஞெய்யார் கயவரே - நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலா மாவைப் ஆபதிரியைப் பார்

என்பது ஔவையாரின் பாடல்.

மேற்கண்ட பாடலில் உலகில் வாழும் மனிதர்களை மூவகைப்படுத்தி உள்ளார்.

1. சொல்லாமல் செய்யக்  கூடியவர்கள் பெரியர். இவர்கள் பூவாமல் காய்க்கும் பலா போன்றவர்.

2. சொல்லிச் செய்வர் சிறியர். இவர்கள் பூத்துக் காய்க்கும் மா போன்றவர்.

3. சொல்லியும் செய்யார் கயவர். இவர்கள் பூத்தும் காய்க்காத பாதிரி போன்றவர்கள்.

என்னே ஔவையாரின் உலகியல் அனுபவ அறிவு. உவமை எளிமையும் இனிமையும் உடையது. ஔவையாரின் அற்புதப் பாடல்.

கருத்துகள் இல்லை: