திங்கள், 9 பிப்ரவரி, 2009

கபிலரின் சிந்தனைகள்

4. கபிலரின் சிந்தனைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருவேறு கபிலர் குறிப்பிடப்¢பட்டுள்ளனர். ஒருவர் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க்காலத்துக் கபிலர்; மற்றொருவர் இன்னாநாற்பது என்ற நூலை எழுதியவர். இவர்கள் இருவரும் ஒருவரே என்று கூறுவாறும் உள்ளனர்.

கபிலர் நட்புக்கு இலக்கணமானவர். பாரி-கபிலர் நட்பு போற்றுதலுக்கு உரியது. பாரி இறந்த பிறகு அவரது மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோருக்குத் திருமணம் செய்து வைப்¢பதற்கு அரும்பாடுபட்டவர். குறுநில மன்னர்களான விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகியோரிடம் இம்மகளிரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினர்.

இவரது தமிழ்ப் புலமையும் பாராட்டுதலுக்கு உரியது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காக குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். மலையின் இயற்கை வருணனையை நயம்படச் சித்தரித்துக் காட்டியமையால் இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டப் படுகிறார். இவர் இந்நூலின் 34 அடிகளில் 99 மலர்கள் வரிசைபட யாத்துள்ளத் திறம் பாராட்டத்தக்கதாகும்.
இவர் எழுதியுள்ள இன்னா நாற்பது என்ற நூல் இன்னாத அதாவது துன்பம் தரும் பொருள்களை எல்லாம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்¢பட்டுள்ளன. வாழ்க்கையில் இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக் கூறும் 40 பாடல்கள் உள்ளமையால் இன்னாநாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலில் மனித வாழ்விற்குத் துன்பம் தரத்தக்க 160 பொருள்கள் நயம்படச் சுட்டப்¢பட்டுள்ளன. ஒரு பாடலில் கூறப்¢பட்டுள்ள நான்கு இன்னாத பொருள்களைக் கேளுங்கள்;

பெரியவர்களோடு சேர்ந்து பழகுதல் வேண்டும். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு - அவர்களின் சொற்படி நடத்தல் வேண்டும். எந்த செயலையும் பெரியவர்களை ஆலோசிக்காமல் செய்யக் கூடாது. அவ்வாறு ஆலோசிக்காமல் செய்த செயல்கள் பெரிதும் வெற்றி பெறுவதில்லை. இதை வலியுறுத்தும் வகையில், சிறு பிள்ளை விட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழியே வழக்கில் உலவி வருகிறது. பெரியவர்களின் துணை கொண்டு வாழ வேண்டும் எனபதை வலியுறத்த எண்ணிய வள்ளுவரும் பெரியாரைத் துணைக்கோடல் என்றும் பெரியாரைப் பிழையாமை என்றும் இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார்.

பெரியவர்கள் என்பவர்கள் நம்மை விட வயதால் மூத்தவராக இருக்கலாம்; கல்வியால் உயர்ந்தவராக இருக்கலாம்; பண்பால் உயர்ந்தவராக இருக்கலாம்; ஒழுக்கத்தால் உயர்ந்தவராக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் - ஏதேனும் ஒரு காரணத்தால் உயர்ந்தவர்களாக இருக்கலாம். பெரியவர்களைத் துணை கொள்ளல் வேண்டும் என்பதை,
பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னாஅரியவை செய்தும் எனவுரைத்தல் இன்னாபரியார்க்குத் தாம்உற்ற கூற்றின்னா இன்னாபெரியார்க்குத் தீய செயல்
என்ற பாடல் தௌ¤வுறுத்துகிறது. அதாவது, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர்களோடு கொண்ட நட்பினைக் கைவிடுதல் துன்பம் தரும்; செய்வதற்கு அறிய காரியங்களைச் செய்து முடிப்பேன் என்று வெற்று ஆரவாரம் செய்தல் பெரிய துன்பத்தை விளைவிக்கும்; நம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்களிடம் நாம் அடைந்த துன்பங்களை எடுத்துரைத்தல் தன்பத்தைத் தருமேயன்றி இன்பத்தைத் தராது; பெருமையுடன் மதிக்கத்தக்கச் சான்றோர்களுக்குத் தீங்கு செய்வதால் பெருந் துன்பங்களே நேரிடும்.
அற மனத்தார், மற மனத்தார் என்ற இரண்டு அருமையான பொருள் பொதிந்த சொற்களைக் கபிலர் பயன்படுத்தி உள்ளார். அற மனத்தார் என்பவர்கள் அறச் செயல்களைச் செய்பவர்கள். மற மனத்தார் என்பவர்கள் மறச் செயல்களை-வீரச்செயல்களைச் செய்பவர்கள்.

அறமனத்தார் கூறும் கடுமொழியும் இன்னாமறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னாஇடும்பை உடையார் கொடை இன்னாகொடும்பாடு உடையார்வாய்ச் சொல்.

அறத்தை விரும்பும் நெஞ்சத்தை உடைய சான்றோர்களான அறமனத்தார் சொல்லுகின்ற கடுஞ் சொற்கள் துன்பத்தைத் தரவல்லன. அதுபோல வீரத்தன்மை மிக்க நெஞ்சத்தினரான மறமனத்தார் போர்க்களத்தில் சோம்பி இருத்தல் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த நாட்டிற்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். வறுமை உடையவர்கள்

வள்ளல்கள் போல் நடந்து கொள்வது துன்பத்தைத் தரும். நடுவுநிலை தவறி - நியாயம் தவறி பேசுபவர்களின் சொற்களும் மிகுந்த துன்பத்தைத் தரவல்லன.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்று வள்ளுவர் பொருட்தேவையைத் திறம்படக் கூறியுள்ளார்.

கிராமத்தில் வாழ்வோர் குறைவான பண வசதி இருந்தாலும்கூட சிறப்பாக வாழ முடிகிறது; ஆனால் நகரத்தில் வாழ்வோர் வாழ்க்கை அப்¢படி இல்லை. மிகுந்த பணம் தேவைப்படுகிறது. இதனைக் கபிலர் நன்கு உணர்ந்தவராகத் தெரிகிறார். அவர் கூற்றைப் பார்க்கும்பொழுது ஒரு வேளை அவர் நகரத்தில் வாழ்ந்தவராக இருப்பாரோ என்று ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது; அல்லது நகரத்தில் வாழ்ந்தவர்களை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். அப்பாடல் இதுதான்;

பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னாநெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னாவருமனை பார்த்திருந்து ஊணின்னா இன்னாகெடும்இடம் கைவிடுவார் நட்பு.
செல்வம் இல்லாதவன் பிறர்க்கு உதவி புரிய வேண்டும் என நினைத்துச் செயல்படுதல் அவனுக்கும் அவனைச் சார்ந்து வாழும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். நெடிய மாடங்களை உடைய பெரிய நகரத்திலே பொருளின்றி - அதாவது தேவையான பொருளின்றி வாழ்தல் மிகுந்த துன்பத்தைத தரும். தம்மை அழையாதவர் வீட்டுக்குச் சென்று அவர் விரும்பும் வரை காத்திருந்து அவர் இடுகின்ற உணைவை உண்டு வருதல் பெருந்துன்பம் ஆகும். இது அழையாதார் வீட்டு விருந்தாளி போல இழிந்த நிலையை ஏற்படுத்தும். வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குவாரின் நட்பு மிகுந்த துன்பத்தைத் தரும். நண்பர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ளத்தக்கவர்களாக இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாமல் நாம் வளமுடன் இருக்கும் காலத்தில் நம்முடன் நலம் துய்த்துவிட்டு வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குதல் என்பது சிறந்த நட்பாகாது. இதைத்தான் வள்ளுவரும்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று கூறியுள்ளார். எனவே, கபிலர் கூறியுள்ள இன்னாதவற்றை நீக்கி இனிமையுடன் வாழ அனைவரும் முயல வேண்டும்.

கருத்துகள் இல்லை: