திங்கள், 9 பிப்ரவரி, 2009

ஒளவையாரின் சிந்தனைகள்

5. ஒளவையாரின் சிந்தனைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே தொடர்ந்து போற்றப்பெறும் புலவர் பெருமாட்டியருள் ஒளவையாரின் அருமைத் திருப்பெயரை அறியாதோர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர்.

ஒளவையார் என்றதும் சுட்டப்¢ பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற ஒளவைக்கும் முருகப் பெருமானுக்கும் நடந்த உரையாடலே அனைவருக்கும் நினைவுக்கு வரும். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை அதியமான் இவரிடம் அன்புடன் கொடுக்க அதனை ஒளவை உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார் என்ற வரலாற்றுச் செய்தி தமிழில் இலக்கிய வரலாறு அறிந்தோருக்கு நன்கு நினைவுக்கு வரும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் என்றால், தமிழ்ப் பாட்டி இந்த ஒளவையார்தான். இப்பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்று அறியப்¢பட்டுள்ளது.

ஒளவையார் என்ற பெயர் தமிழில் தாய்க்கும், தெலுங்கில் பாட்டிக்கும், கன்னடத்தில் மூதாட்டியாகிய கிழவிக்கும் வழங்கப்¢படுவதாக கன்னட மொழி அகராதிக்காரரான கிட்டல் என்பவர் குறிப்பிடுகிறார். அம்மை என்ற சொல்லின் திரிபு அவ்வை என்றும் அச்சொல்லுடன் ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்ந்து அவ்வையார் (ஒளவையார்) என்ற சொல் தோன்றியது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இன்றைய சான்றோர் சிந்தனைப் பகுதியில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்¢படுகிற ஒளவையாரின் சிந்தனைத் துளிகளைக் காண்போம்;

அறிவால் - குணத்தால்- செய்கைகளால் - மேம்பட்டவர்களை மக்களில் மேலோர் என்ற பொருண்மையில் மேன்மக்கள் என்று அழைப்¢பர். இவர்கள் தங்களின் நல்ல பண்புகளிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தங்களுக்குக் கேடு வந்துற்றபொழுதும் கூட தங்களின் மேலான குணாதிசயங்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்று ஒளவையார் தௌ¤வுபடக் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறுகின்ற உவமைகள் மிக அழகானவை - எளிமையானவை - பாமரருக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை.

பால் சுவை மிகுந்தது. அதனைக் காய்ச்சினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்; சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அதன் சுவையே தனிதான். சங்கு நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனைச் சுட சுட அதன் நிறம் மேலும் மேலும் மெருகேறும் - வெள்ளை நிறம் பளிச்சிடும்.

இவை பாமரரும் அறிந்த உண்மையாகும். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைப் பொருள்களைக் கூறி - இவை போல மேன்மக்கள் தங்களின் செல்வம் உள்ளிட்ட தகுதி நிலைகளிலிருந்து தளர்ந்து போய்விட்டாலும் - அதாவது கெட்டுப் போய்விட்டாலும் தங்களின் மேலான குண நலன்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்பதை ஒளவையார் தமக்கே உரிய பாணியில் பாடல் புனைந்துள்ளார். இக்கருத்தை வெளிப்¢படுத்தும் பாடல் இதுதான்;

அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளவாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்தல் வேண்டும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்களிடத்திலே கூட இந்த நல்ல பண்பு இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மக்களிடத்து மட்டும் இது குறைவாகவே காணப்¢படுவது வருத்தத்திற்குரியது ஆகும்.
ஒருவருக்குச் செய்கின்ற உதவி அவரிடமிருந்து பிறிதொரு பயனை எதிர்பார்த்ததாக இருத்தல் கூடாது. உதவி உதவி வரைத்தன்று என்பது வள்ளுவம். அங்ஙனம் ஒருவர் செய்த உதவியை மறந்து விடவும் கூடாது. ஏனெனில் நன்றி மறப்¢பது நன்றன்று.

உதவி என்பது யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படுகின்ற பொழுது செய்யலாம். நல்லவர்கள் அதனை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். காலம் காலமாக உதவி செய்தவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்கள் அல்லாதவர்கள் பிறர் செய்த உதவியை விரைவில் மறந்து விடுவர்.

செய்த உதவி ஒன்றுதான். ஆனால் செய்யப்¢பட்டவர்களின் தன்மைக்கேற்ப நினைக்கப்¢படுகிறது அல்லது மறக்கப்¢படுகிறது. இந்த இரண்டும் உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள்தாம். இதனை உள்வாங்கிக்
கொண்ட ஒளவையார் அதனைத் தம் பாடலில் மிகத் தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். அப்¢பாடல் வரிகள் இதுதான்;

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே - அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர்மேல் எழுத்துக்கு நேர்
கல்மேல் எழுதுகிற வழக்கம் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே நிலைபெற்றிருக்கிற ஒன்றாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு கல்வெட்டுக்களாக வடித்துள்ளனர் - செப்புப் பட்டயங்களாகத் தந்துள்ளனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான போதிலும் இன்றும் பல கல்வெட்டுச் செய்திகள் அழியாமல் பல உண்மைகளை நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன. மேலும் மேலும் பல கல்வெட்டுக்கள் புதிதாக கண்டுபிடிக்கப்¢பட்டு வருகின்றன. இன்னும் பல கண்டுபிடிக்கப் படாமலேயே புதைநிலையில் அமிழ்ந்துள்ளன. எனவே கல்வெட்டுச் செய்திகள் சாகா வரம் பெற்றவையாகும்.

இக்கருத்தை ஒளவையார் மிக அழகாகக் கையாண்டுள்ளார். நல்ல மனிதர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் நிலைத்து நிற்கும். பிறர் செய்த உதவியை நல்லவர்கள் என்றுமே மறப்¢பது இல்லை. இதனால்தான் ‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.

ஆனால் தீயவர்களுக்குச் செய்த உதவி இதற்கு நேர் மாறானது. அவர்கள் பிறர் செய்த உதவியை உடனேயே மறந்து போய்விடுவர். எனவே இவர்களுக்குச் செய்த உதவி என்பது நீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றதாகும். நீர் மேல் எழுத முடியாது என்பதும் அப்¢படியே எழுதினாலும் நிலைத்து நிற்காது என்பதும் உலகம் அறிந்த உண்மை.

கல்லெழுத்து, நீர் மேல் எழுத்து என்ற இரண்டு உலக உண்மைகளைப் பயன்படுத்தி - மக்களுக்கு எடுத்துக்கூறி நல்லவர்களுக்கும் அல்லவர்களுக்கும் செய்கின்ற உதவி எப்¢படி இருக்கும் என்பதை ஒளவையார் மிக நேர்த்தியாக விளக்கி உள்ளார். இங்ஙனம் ஒளவையாரின் பாடல்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் படிப்¢பவர்களுக்கு இனிமையாகவும் அவர்கள் உள்ளத்தில் கருத்துக்கள் பசு மரத்தாணி போல பதிகின்ற விதத்திலும் அமைந்துள்ளமையை ஒவ்வொருவரும் காணலாம். அவர்கள் உதிர்த்த முத்துப் போன்ற கருத்துக்களில் சில;

சோழ நாட்டின் பெருமையையும் வளத்தையும் ஒருசேர எடுத்துரைக்கும் - சோழ வள நாடு சோறுடைத்து.
நாடு வாழ்ந்தால் நாமும் வாழலாம் என்ற உண்மையை வெளிப்¢படுத்தும் - நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை.

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லுதல் மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்பதை வலியுறுத்தும் - மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும்.

அகங்காரம் கூடாது - அடக்கமே வேண்டும் என்பதைச் சுட்டும் வகையில் - கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

இவை போன்ற ஒளவையாரின் அமுத மொழிகள் மானுட நெறி சிறக்கவும் - சான்றோர் நிறைந்த நாடாக நம் நாடு செழிக்கவும் - வையத்தை வாழ்வாங்கு வாழ்விப்¢பதற்கும் பேருதவியாய் இருக்கும் என்று நம்பலாம்.

கருத்துகள் இல்லை: