திங்கள், 15 நவம்பர், 2010

சிலப்பதிகார 'வரிகள்' - 1

சிலப்பதிகார 'வரிகள்' - 1

கண்கூடு வரி:
தான் நயந்து ஏற்ற தலைமகன் கோவலனோடு அவள் வாழ்ந்த மனை வாழ்வில் அவனால் தனக்கொரு நலம் என்ற எண்ணத்தின் எண்ணமும் இல்லாமல் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் அவனை மகிழ்விப்பதே தனக்கொரு புருஷார்த்தம் என்று கொண்டு அவள் வாழ்ந்தது.

உள்வரி:
தனது உருவத்தை மறைத்து வேறொரு பெண்போல் வேடம் புனைந்து தோற்றம் அளிக்கும் விளையாட்டு. ஊடிப்பிரிந்து தலைவன் உற்ற துன்பத்தை அகற்றி மாதவி நடித்த நடிப்புத் தொழில்.


புறவரி: 
 அணிந்து மகிழ விழையும் காதலனை நெருங்காமல் விலகிச் சென்று அவனது வேட்கையை மிகுவிக்கும் விளையாட்டு.

கிளர்வரி:
ஊடிப்பிரிந்து காதலனைச் சேர்த்து வைக்கச் சிலதியர் அவர்களுக்கு இடை நின்று முயல்வதும், அப்பொழுது காதலி, அணைய விழையும் காதலனின் மொழியில் அவன் கருதாத குறிப்பைக் கற்பித்துக் கொண்டு ஊடி அகல்வது.

கருத்துகள் இல்லை: