திங்கள், 13 ஏப்ரல், 2020

படித்ததில் பிடித்தது - 2

தனிப்பாடல்கள் சில சொல் விளையாட்டுகளாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

காளமேகப்புலவர்

செற்றலரை வென்ற திருமலைராயன் கரத்தில்
வெற்றிபுரியும் வாளே வீரவாள் - மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவாள் அவாளாம்.

அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் (சந்தனம்) என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் (கரும்பு) என்றேன்  தின்னும் என்றாள்
பகடென்றேன் (மாடு) உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா (கம்பு மாவு) என்றேன் நற்களியாம் என்றாள்
கைம்மா(கையை உடைய விலங்கு - யானை) என்றேன்  சும்மா கலங்கினாளே.

கருத்துகள் இல்லை: